661. | தன்னில் ஆசறு சித்தமும் இன்றித் | | தவம்மு யன்றவ மாயின பேசிப் | | பின்ன லார்சடை கட்டிஎன் பணிந்தாற் | | பெரிதும் நீந்துவ தரிதது நிற்க | | முன்னெ லாம்முழு முதலென்று வானோர் | | மூர்த்தி யாகிய முதலவன் றன்னைச் | | செந்நெ லார்வயல் திருத்தினை நகருட் | | சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே. | | 7 |
பிறப்புக்களுமாம். இரண்டினை இரப்பார், அவ்வவ்விடத்தும் 'மனமே' என விளித்தார் என்க. "கடற் சூர்" என்றதற்கு, 'கடலிடை வாழ்ந்த சூரன்' என்று உரைத்தலுமாம். 7. பொ-ரை: மனமே, தன்னிடத்துக் குற்றமின்றி நிற்கும் மனத்தை யுடையராகாது, தவத்தொழிலைச் செய்து, பயனில்லாத சொற்களைப் பேசி, பின்னுதல் பொருந்திய சடைகளைச் சேர்த்துக் கட்டிக்கொள்ளுதலுடன் எலும்பினை அணிந்து கொள்ளுதலாகிய வேடத்தைப் பூண்டு கொண்டாலே, மக்கள், பிறவியாகிய கடலை முற்றக் கடந்துவிடுதல் இயலாது; ஆதலின், அந்நிலை நின்னின் வேறாய் நிற்க, நீ, தேவர்கட்குத் தேவனாய் உள்ள பெருந்தேவனாகிய, செந்நெற் பயிர்கள் நிறைந்த வயல்களையுடைய திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற, நன்மையின் மேலெல்லையாய் உள்ள பெருமானை, அணுகச் சென்று, இவனே, தொன்மையாய முழுமுதற் கடவுள் என்று துணிந்து அடைவாயாக. கு-ரை: "தன்னில்" என்றது, பன்மை யொருமை மயக்கம்; அவரவரது சித்தத்தையும் தனித்தனிக் குறித்தவாறு. "தவம்" என்றது, பலவகை நோன்புகளை; பயனில்லாத சொற்கள், 'விரதங்களே பயன்தரும்; முதல்வன் வேண்டா' என்று கூறுவன. இங்ஙனங் கூறுவோர் மீமாஞ்சகர்; அவரது நிலையை, "விரத மேபர மாகவே தியரும்சரத மாகவே சாத்திரங் காட்டினர்" (தி. 8 திருவா. போற்றி 50, 51) எனவும்,
|