பக்கம் எண் :

திருவாசகம்
215


கூட வேண்டும்நான் போற்றி இப்புழுக்
கூடு நீக்கெனைப் போற்றி பொய்யெலாம்
வீட வேண்டும்நான் போற்றி வீடுதந்
தருளு போற்றிநின் மெய்யர் மெய்யனே.

பதப்பொருள் : நின் மெய்யர் மெய்யனே - உன் மெய்யன்பர்க்கு மெய்யானவனே, போற்றி - வணக்கம்; நான் - அடியேன், நின்னையே - உன்னையே, பாட வேண்டும் - பாடுதல் வேண்டும், போற்றி - வணக்கம்; நான் - அடியேன், பாடி - பாடுதல் செய்து, நைந்து நைந்து உருகி - மனம் கசிந்து கசிந்து உருகி, நெக்கு நெக்கு - நெகிழ்ந்து நெகிழ்ந்து, ஆடவேண்டும் - ஆடுதல் வேண்டும்; போற்றி - வணக்கம்; நாயினேன் நான் - நாயினேனாகிய அடியேன், அம்பலத்து ஆடும் - அம்பலத்தில் நடிக்கின்ற, நின் கழல் போது - உன் திருவடித் தாமரை மலரை, கூடவேண்டும் - சேர வேண்டும்; போற்றி - வணக்கம்; எனை - அடியேனுக்கு, இப்புழுக்கூடு நீக்கு - இந்தப் புழுக்கூடாகிய உடம்பை நீக்குவாயாக; போற்றி - வணக்கம்; நான் - அடியேன் பொய் எலாம் - பொய்கள் எல்லாவற்றையும், வீட வேண்டும் - நீங்க வேண்டும்; போற்றி - வணக்கம்; வீடு தந்தருள் - முத்தியைக் கொடுத்தருள்வாயாக.

விளக்கம் : பாடுதல், மொழிப் பணி; உருகுதல், உள்ளப் பணி; ஆடுதல், மெய்ப்பணி. மொழி மனம் மெய்யென்னும் முக்கரண வழிபாடாகிய இவற்றை இறைவன் உலகத்தில் இருந்து செய்ய விரும்பி, 'வீடு தந்தருளு' என்று வேண்டுகிறார்.

இதனால், வீட்டுலக இன்பத்தின் சிறப்புக் கூறப்பட்டது.

100