25. ஏறுடை ஈசனிப் புவனியை உய்யக் கூறுடை மங்கையும் தானும்வந் தருளி குதிரையைக் கொண்டு குடநா டதன்மிசைச் சதுர்படச் சாத்தாய்த் தானெழுந் தருளியும் வேலம் புத்தூர் விட்டே றருளிக் 30. கோலம் பொலிவு காட்டிய கொள்கையும் தர்ப்பண மதனிற் சாந்தம் புத்தூர் விற்பொரு வேடற் கீந்த விளைவும் மொக்கணி அருளிய முழுத்தழல் மேனி சொக்க தாகக் காட்டிய தொன்மையும் 35. அரியொடு பிரமற் களவறி யொண்ணான் நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும் ஆண்டுகொண் டருள அழகுறு திருவடி பாண்டி யன்றனக் குப்பரி மாவிற் றீண்டு கனகம் இசையப் பெறாஅ 40. தாண்டா னெங்கோன் அருள்வழி யிருப்பத் தூண்டு சோதி தோற்றிய தொன்மையும் அந்தண னாகி யாண்டுகொண் டருளி இந்திர ஞாலங் காட்டிய இயல்பும் மதுரைப் பெருநன் மாநக ரிருந்து 45. குதிரைச் சேவக னாகிய கொள்கையும் ஆங்கது தன்னி லடியவட் காகப் பாங்காய் மண்சுமந் தருளிய பரிசும் உத்தர கோச மங்கையு ளிருந்து வித்தக வேடங் காட்டிய இயல்பும் 50. பூவண மதனிற் பொலிந்திருந் தருளித் தூவண மேனி காட்டிய தொன்மையும் வாத வூரினில் வந்தினி தருளிப் பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும் திருவார் பெருந்துறைச் செல்வ னாகிக் 55. கருவார் சோதியில் கரந்த கள்ளமும் பூவல மதனிற் பொலிந்தினி தருளிப் பாவ நாச மாக்கிய பரிசும் தண்ணீர்ப் பந்தர் சயம்பெற வைத்து நன்னீர்ச் சேவக னாகிய நன்மையும்
|