60. விருந்தின னாகி வெண்கா டதனிற் குருந்தின் கீழன் றிருந்த கொள்கையும் பட்ட மங்கையிற் பாங்கா யிருந்தங் கட்டமா சித்தி யருளிய அதுவும் வேடுவ னாகி வேண்டுருக் கொண்டு 65. காடது தன்னிற் கரந்த கள்ளமும் மெய்க்காட் டிட்டு வேண்டுருக் கொண்டு தக்கான் ஒருவ னாகிய தன்மையும் ஓரி யூரின் உகந்தினி தருளிப் பாரிரும் பாலக னாகிய பரிசும் 70. பாண்டூர் தன்னில் ஈண்ட விருந்தும் தேவூர்த் தென்பாற் றிகழ்தரு தீவிற் கோவார் கோலங் கொண்ட கொள்கையும் தேனமர் சோலைத் திருவா ரூரில் ஞானந் தன்னை நல்கிய நன்மையும் 75. இடைமரு ததனில் ஈண்ட விருந்து படிமப் பாதம் வைத்தவப் பரிசும் ஏகம் பத்தின் இயல்பா யிருந்து பாகம் பெண்ணோ டாயின பரிசும் திருவாஞ் சியத்தில் சீர்பெற இருந்து 80. மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும் சேவக னாகித் திண்சிலை ஏந்திப் பாவகம் பலபல காட்டிய பரிசும் கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும் ஈங்கோய் மலையில் எழிலது காட்டியும் 85. ஐயா றதனில் சைவ னாகியும் துருத்தி தன்னி லருத்தியோ டிருந்தும் திருப்பனை யூரில் விருப்ப னாகியும் கழுமல மதனிற் காட்சி கொடுத்தும் கழுக்குன் றதனில் வழுக்கா திருந்தும் 90. புறம்பய மதனில் அறம்பல அருளியும் குற்றா லத்துக் குறியா யிருந்தும் அந்தமில் பெருமை யழலுருக் கரந்து சுந்தர வேடத் தொருமுத லுருவுகொண் டிந்திர ஞாலம போலவந் தருளி
|