25. நீரில் இன்சுவை நிகழ்ந்தோன்; வெளிப்பட மண்ணில் திண்மை வைத்தோன்; என்றென் றெனைப்பல கோடி எனைப்பல பிறவும் அனைத்தனைத் தவ்வயின் அடைத்தோன்; அஃதான்று, முன்னோன் காண்க! முழுதோன் காண்க! 30. தன்னே ரில்லோன் தானே காண்க! ஏனத் தொல்லெயி றணிந்தோன் காண்க! கானப் புலியுரி அரையோன் காண்க! நீற்றோன் காண்க! நினைதொறும் நினைதொறும் ஆற்றேன் காண்க! அந்தோ! கெடுவேன்! 35. இன்னிசை வீணையில் இசைந்தோன் காண்க! அன்னதொன் றவ்வயின் அறிந்தோன் காண்க! பரமன் காண்க! பழையோன் காண்க! பிரமன்மால் காணாப் பெரியோன் காண்க! அற்புதன் காண்க! அநேகன் காண்க! 40. சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க! சித்தமுஞ் செல்லாச் சேட்சியன் காண்க! பத்தி வலையிற் படுவோன் காண்க! ஒருவன் என்னும் ஒருவன் காண்க! விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க! 45. அணுத்தருந் தன்மையி லையோன் காண்க! இணைப்பரும் பெருமையில் ஈசன் காண்க! அரியதில் அரிய அரியோன் காண்க! மருவிஎப் பொருளும் வளர்ப்போன் காண்க! நூலுணர் வுணரா நுண்ணியோன் காண்க! 50. மேலொடு கீழாய் விரிந்தோன் காண்க! அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க! பந்தமும் வீடும் படைப்போன் காண்க! நிற்பதும் செல்வதும் ஆனோன் காண்க! கற்பகம் இறுதியும் கண்டோன் காண்க! 55. யாவரும் பெறவுறும் ஈசன் காண்க! தேவரு மறியாச் சிவனே காண்க! பெண்ஆண் அலியெனும் பெற்றியன் காண்க!
|