160. றருட்பெருந் தீயின் அடியோம் அடிக்குடில் ஒருத்தரும் வழாமை யொடுக்கினன்; தடக்கையின் நெல்லிக் கனியெனக் காயினன்; சொல்லுவ தறியேன்; வாழி! முறையோ? தரியே னாயேன்; தான்எனைச் செய்தது 165. தெரியேன்; ஆவா! செத்தேன்! அடியேற் கருளிய தறியேன்; பருகியும் ஆரேன்; விழுங்கியும் ஒல்ல கில்லேன்; செழுந்தண் பாற்கடல் திரைபுரைவித் துவாக்கடல் நள்ளுநீ ருள்ளகந் ததும்ப 170. வாக்கிறந் தமுத மயிர்க்கால் தோறும் தேக்கிடச் செய்தனன்; கொடியே னூன்தழை குரம்பு தோறும் நாயுட லகத்தே குரம்பைகொண் டின்தேன் பாய்த்தி நிரம்பிய அற்புத மான அமுத தாரைகள் 175. எற்புத் துளைதொறும் ஏற்றினன்; உருகுவ துள்ளங் கொண்டோ ருருச்செய் தாங்கெனக் கள்ளூ றாக்கை அமைத்தனன் ஒள்ளிய கன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறை என்னையுய்ம இருப்ப தாக்கினன்; என்னிற் 180. கருணை வான்தேன் கலக்க அருளொடு பராவமு தாக்கினன் பிரமன்மா லறியாப் பெற்றி யோனே. திருச்சிற்றம்பலம்
|