பக்கம் எண் :

திருவாசகம்
79


70. ஐம்புலப் பந்தனை வாளர விரிய
வெந்துயர்க் கோடை மாத்தலை கரப்ப
நீடெழில் தோன்றி வாளொளி மிளிர
எந்தம் பிறவியில் கோப மிகுத்து
முரசெறிந்து மாப்பெருங் கருணையின் முழங்கிப்

75. பூப்புரை யஞ்சலி காந்தள் காட்ட
எஞ்சா இன்னருள் நுண்துளி கொள்ளச்
செஞ்சுடர் வெள்ளம் திசைதிசை தெவிட்ட வரையுறக்
கேதக் குட்டங் கையற வோங்கி
இருமுச் சமயத் தொருபேய்த் தேரினை

80. நீர்நிசை தரவரு நெடுங்கண் மான்கணம்
தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வொடும்
அவப்பெருந் தாப நீங்கா தசைந்தன
ஆயிடை, வானப் பேரியாற் றகவயிற்
பாய்ந்தெழுந் தின்பப் பெருஞ்சுழி கொழித்துச்

85. சுழித்தெம் பந்தமாக் கரைபொரு தலைத்திடித்
தூழூழ் ஓங்கிய நங்கள்
இருவினை மாமரம் வேர்ப றித்தெழுந்
துருவ அருள்நீர் ஓட்டா வருவரைச்
சந்தின் வான்சிறை கட்டி மட்டவிழ்

90. வெறிமலர்க் குளவாய் கோலி நிறையகில்
மாப்புகைக் கரைசேர் வண்டுடைக் குளத்தின்
மீக்கொள மேன்மேன் மகழ்தலின் நோக்கி
அருச்சனை வயலுள் அன்புவித் திட்டுத்
தொண்ட உழவர் ஆரத் தந்த

95. அண்டத் தரும்பெறல் மேகன் வாழ்க!

பதப்பொருள் : பரமானந்தப் பழங்கடலதுவே - மேன்மையான பேரின்பக்கடல் முழுவதுமே, கருமா முகிலின் தோன்றி - சூல் கொண்ட கரிய பெருமேகம் போல வடிவெடுத்து, திரு ஆர் பெருந்துறை வரையில் ஏறி - அழகு நிறைந்த திருப்பெருந்துறை என்னும் மலைமேல் ஏறி, திருத்தகு மின் ஒளி திசைதிசை விரிய - தக்க அருளாகிய மின்னல் வெளிச்சமானது ஒவ்வொரு திசையிலும் பரவ, ஐம்புலப் பந்தனை - ஐவகை வேட்கைப் பிணிப்பாகிய, வாள் அரவு இரிய - வாள் போன்ற கொடிய பாம்புகள் கெட்டு ஓட, வெந்துயர் கோடை மா தலை கரப்ப - பிறவியென்னும் கடுந்துன்பமாகிய வேனிலானது தனது விரிந்த தலையை மறைத்துக்கொள்ள, நீடு எழில் தோன்றி வாள் ஒளி மிளிர - மிகுந்த அழகுடைய தோன்றிச்செடி போலத் தோன்றிய ஆசிரியரது ஞானவொளி விளங்க, எம்தம் பிறவியில் கோபம் மிகுத்து - எங்கள் பிறவிகளாகிய தம்பலப்பூச்சிகள்