25. துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும் ஆண்டுகள் தோறும் அடைந்தஅக் காலை ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும் காலை மலமொடு கடும்பகல் பசிநிசி வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும் 30. கருங்குழற் செவ்வாய் வெண்ணகைக் கார்மயில் ஒருங்கிய சாயல் நெருங்கிஉள் மதர்த்துக் கச்சற நிமிர்ந்து கதிர்த்து முன்பணைத் தெய்த்திடை வருந்த எழுந்து புடைபரந் தீர்க்கிடை போகா இளமுலை மாதர்தம் 35. கூர்த்த நயனக் கொள்ளையிற் பிழைத்தும் பித்த வுலகர் பெருந்துறைப் பரப்பினுள் மத்தக் களிறெனும் அவாவிடைப் பிழைத்தும் கல்வி யென்னும் பல்கடல் பிழைத்தும் 40. நல்குர வென்னுந் தொல்விடம் பிழைத்தும் புல்வரம் பாய பல்துறை பிழைத்தும் தெய்வ மென்பதோர் சித்தமுண் டாகி முனிவி லாததோர் பொருளது கருதலும் ஆறு கோடி மாயா சத்திகள் 45. வேறு வேறுதம் மாயைகள் தொடங்கின ஆத்த மானார் அயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர் சுற்ற மென்னும் தொல்பசுக் குழாங்கள் பற்றி அழைத்துப் பதறினர் பெருகவும் 50. விரத மேபர மாகவே தியரும் சரத மாகவே சாத்திரம் காட்டினர் சமய வாதிகள் தத்த மதங்களே அமைவ தாக அரற்றி மலைந்தனர் மிண்டிய மாயா வாத மென்னும் 55. சண்ட மாருதம் சுழித்தடித் தாஅர்த் துலோகா யதனெனும் ஒண்டிறற் பாம்பின்
|