190. கலையார் அரிகே சரியாய் போற்றி திருக்கழுக் குன்றிற் செல்வா போற்றி பொருப்பமர் பூவணத் தரனே போற்றி அருவமும் உருவமும் ஆனாய் போற்றி மருவிய கருணை மலையே போற்றி 195. துரியமு மிறந்த சுடரே போற்றி தெரிவரி தாகிய தெளிவே போற்றி தோளா முத்தச் சுடரே போற்றி ஆளா னவர்கட் கன்பா போற்றி ஆரா அமுதா அருளே போற்றி 200. போரா யிரமுடைப் பெம்மான் போற்றி தாளி அறுகின் தாராய் போற்றி நீளொள யாகிய நிருத்தா போற்றி சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி சிந்தனைக் கரிய சிவமே போற்றி 205. மந்திர மாமலை மேயாய் போற்றி எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி புலிமுலை புல்வாய்க் கருளினை போற்றி அலைகடன் மீமிசை நடந்தாய் போற்றி கருங்குரு விக்கன் றருளினை போற்றி 210. இரும்புலன் புலர இசைந்தனை போற்றி படியுறப் பயின்ற பாவக போற்றி அடியொடு நடுவீ றானாய் போற்றி நரகொடு சுவர்க்க நானிலம் புகாமற் பரகதி பாண்டியற் கருளினை போற்றி 215. ஒழிவற நிறைந்த வொருவ போற்றி செழுமலர்ச் சிவபுரத் தரசே போற்றி கழுநீர் மாலைக் கடவுள் போற்றி தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி பிழைப்பு வாய்ப்பொன் றறியா நாயேன் 220. குழைத்தசொன் மாலை கொண்டருள் போற்றி புரம்பல எரித்த புராண போற்றி
|