பக்கம் எண் :

84கருவூர்த் தேவர் திருவிசைப்பா[ஒன்பதாந்


127. 
 

முழுவதும்நீ யாயினும்இம் மொய்குழலாள் மெய்ம்
                                     [முழுதும்
பழுதெனவே நினைந்தோராள் ; பயில்வதும்நின்
                                 [னொருநாமம்;
அழுவதும்நின் திறம்நினைந்தே; அதுவன்றோபெறும்பேறு !
செழுமதில்சூழ் பொழிற்கோடைத் திரைலோக்கிய
                                 [சுந்தரனே.   (6)
 

128. 
 

தன்சோதி எழுமேனித் தபனியப்பூச் சாய்க்காட்டாய்
உன்சோதி எழில்காண்பான் ஒலிடவும் உருக்காட்டாய் ;
துஞ்சாகண் ணிவளுடைய துயர்தீரும் ஆறுரையாய் ;
செஞ்சாலி வயற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
 

என்றதனைத்     திரித்து, ‘எளியளாகிய இவள் நின்னிடத்தே   வந்து
விழ’   என   உரைக்க.   ‘குவளை  மலரும்  கோவாத மணிமுத்துச்
சொரிந்தன’  என  உம்மையை மாற்றி உரைக்க. குவளை மலர்-கண் ;
உருவகம்.   ‘கோவாத   மணியாகிய   முத்து’  என்றது, கண்ணீரைக்
குறித்தல் வெளிப்படை. ஆவா, இரக்கக் குறிப்பு. தென்-அழகு.

127.     மெய்  முழுதும்-தனது  உடல்  உறுப்புக்கள்     பலவும்
பழுது-குற்றம்  உடையன.  ஓராள்-அவற்றை மதிக்கின்றிலள் ; எனவே
‘உண்ணாமை,   நீராடாமை,  ஒப்பனை  செய்யாமை  முதலியவற்றால்
அவைகளை   வருத்துகின்றாள்’   என்பதாம்.   எல்லாப்  பொருளும்
நீயேயாயினும்,     நீ     அங்ஙனம்     எங்குமாய     இன்பத்தை
இவ்வுடம்புகொண்டு  இவள்  பெறாமையால், இதனை வெறுக்கின்றாள்’
என்பது  பொருள்.  இதனால்,  சிவன்  முத்திநிலையில்  நிற்பார்க்கும்
பரமுத்தி  நிலைக்கண்  உளதாகும்  வேட்கை மிகுதி குறிக்கப்பட்டமை
காண்க.  ‘‘அதுவன்றோ  பெறும்  பேறு’’  என்றது,  ‘‘இவள்  பெற்றது
அவ்வளவே’   என்னும்   பொருட்டாய்   அவலம்  குறித்ததாயினும்,
உண்மைப்     பொருளில்,     இவ்வுடம்புகொண்டு     பெறும்பேறு
அதுவேயன்றோ’ என்பது குறித்துநிற்கும்.

128. ‘தன் மேனி’ என இயையும்.‘‘தன்’’ என்றது, தலைவியை. சோதி,
இங்கு  அழகு.  மேனி-உடம்பு.  உடம்பின் கண் தோன்றிய,  தபனியப்
பூச்   சாய்  காட்டாய்-பொற்பூப்போலும்  நிறமே  (பசலையே)   தனது
வருத்தத்திற்குச்  சான்றாய்நிற்க.  ‘‘ஆய்’’  என்றதனை,  ‘ஆக’  எனத்
திரிக்க.