| உறைக்கொன்றை யோவுடைத் தோலோ பொடியோ உடைகலனோ கறைக்கண்ட ரேநுமக் கென்னோ சிறுமி கடவியதே. | | 79 |
| 248. | கடவிய தொன்றில்லை ஆயினும் கேண்மின்கள் காரிகையாள் மடவிய வாறுகண் டாம்பிறை வார்சடை எந்தைவந்தாற்(கு) இடவிய நெஞ்சம் இடங்கொடுத் தாட்கவ லங்கொடுத்தான் தடவிய கொம்பதன் தாள்மேல் இருந்து தறிக்குறுமே. | | 80 |
பொருந்திய விளாம் பூவோ? எலும்போ? விரிந்த சடைமேல் இருக்கின்ற கொன்றை மாலை யோ? உடையாகப் பொருந்திய தோலோ? சாம்பலோ? உடைந்து போன பிச்சைப் பாத்திரமோ? குறிப்புரை: 'இவை தவிர உம்மிடத்தில் வேறு என்ன இருக்கின்றது' எனச் சொல்லி நகையாடித் தன் தலைவியின் அறியாமைக்குத் தோழி இரங்கியவாறு. "சிறுமி" என்றது பேதைமை குறித்ததே. 'இப் பேதைமையுடையாளை நீ கைவிடலாகாது' என ஓம்படுத்தினாள் என்க. வெறி - நறுநாற்றம் வெள்ளில் - விளா 'உறைதலை யுடைய கொன்றை' - என்க. உடை கலன், வினைத் தொகை. 'நுமக்குப் பெய்தது' என மேலே கூட்டுக. கடவியது - கடாவியது. கேட்டது. 248.பொழிப்புரை: இவள் இங்கு வந்த நீண்ட சடையை யுடைய, பலரும் 'எம் தந்தை' எனப் போற்றுகின்ற சிவபெரு மானிடம் எதனையும் இரக்கவில்லையாயினும் அவன் செய்த தைக் கேளுங்கள்; அவனுக்குத் தனது விரிந்த நெஞ்சத்தை இடமாகக் கொடுத்த ஒன்றுதான் இவள் செய்தது. ஆயினும், அதற்குக் கைம்மாறாக அவன் இவளுக்குத் துன்பத்தைக் கொடுத்தான். பெரிய கிளைகள் அடிமரத்தின்மேலே இருக்கும் பொழுது அந்த அடிமரம் நிற்கக் கிளை வெட்டப்படுவது உலக இயல்புதானே? குறிப்புரை: 'அதுபோல, இவட்குப் பற்றுக்கோடாயினார் பலர் இருக்கவும் இவள் இறந்துபடுகின்றாள்' என்பதாம் ஈற்றடி ஒட்டணியாய் நின்றது 'ஆகவே, இவளது அறியாமையின் நிலையை யாம் கண்டோம்' என முடிக்க. கடவியது - கடாவியது; கேட்டது. "காரிகையாள்" என்பதை முதலிற் கூட்டுக. மடவியவாறு. மடமையளாகிய வகை. இடவிய - இடம் பரந்த. தடவிய - பெரிய; 'தட' என்னும் உரியடியாகப் பிறந்த பெயரெச்சம். கொம்பு - கிளை தாள் - அடிமனம். தறிக்குறும் - வெட்டப்படும்.
|