பக்கம் எண் :

171திருவாரூர் மும்மணிக்கோவை

ஒண்ணுதல் திலகமும் அழிந்தது; கண்ணும்
மைந்நிறம் ஒழிந்து செந்நிறம் எய்தி
5.உள்நிறை கொடுமை உரைப்ப போன்றன;

சேதகம் பரந்தது செவ்வாய்; மேதகு
குழைகெழு திருமுகம் வியர்ப்புள் ளுறுத்தி
இழைகெழு கொங்கையும் இன்சாந் தழீஇக்
கலையுந் துகிலும் நிலையிற் கலங்கி

10.என்னிது விளைந்த வாறென மற்றி(து)

அன்னது அறிகிலம் யாமே; செறிபொழில்
அருகுடை ஆரூர் அமர்ந்துறை அமுதன்
முருகுவிரி தெரியல் முக்கண் மூர்த்தி
மராமரச் சோலைச் சிராமலைச் சாரல்

15.சுரும்பிவர் நறும்போது கொய்யப்

பெருஞ்செறு வனத்தில்யான் பிரிந்ததிப் பொழுதே. 

10



நறுமணத்தோடு மலர்கின்ற மாலையை அணிந்த வனும், மூன்று கண்களையுடையவனும் ஆகிய இறைவனது மராமீச் சோலையையுடைய திருச்சிராமலைச் சாரலில், வண்டுகள் வீழும் நறிய போது சிலவற்றைக் கொய்து வருதற் பொருட்டு, அடர்த்தியான காட்டில் இவளை யான் இப்பொழுதுதான் பிரிந்து போய்வந்தேன். (நெடும்பொழுது தாழ்த்திலேன்; வந்து பார்க்கும் பொழுது) இவளுடைய இருள் போன்ற கூந்தல் எழுச்சியுடைய அழகு சிதைந்து குலைந்துள்ளது; வியப்பைத் தரும், வண்டுகள் ஒலிக்கும் மாலை அலங்கோலமாகக் கசங்கியுள்ளது, ஒளிபொருந்திய நெற்றியில் இட்டதிலகம் அழிந்துவிட்டது. கண்களில் தீட்டிய மை களைய, கண்கள் சிவந்து, எவையோ சில கொடுமையைக் கூறுவனபோல்வன போன்றன; சிவந்த வாய் அந்நிலை குலைந்தது; காதில் குழையணிந்தமையால் அழகிதாய்த் தோன்றும் முகம் வெயர்ப்புடையதாக, அணிகலம் பொருந்திய தனங்களில் பூசப்பட்ட சந்தனம் அழிந்து, மேகலையும், உடையும் நெகிழ்ந்தமையால் ‘இவ்வாறான இந்நிலை எத்தன்மையின் விளைவு’ என அறியயாம் இயலேம்.

குறிப்பு: இது, தலைவி தலைவனது களவொழுக்கத்துட் பட்டமையைத் தலைவியது தோற்றம் பற்றித் தோழி குறிப்பால் உணர்ந்தது, திணை குறிஞ்சி. “செறி பொழில்” என்பது முதலாகத் தொடங்கியுரைக்க.