பக்கம் எண் :

19திருஇரட்டை மணிமாலை

காரைக்கால் அம்மையார்
அருளிச்செய்த

3. திருஇரட்டைமணிமாலை

திருச்சிற்றம்பலம்

24.கிளர்ந்துந்து வெந்துயர் வந்தடும் போதஞ்சி நெஞ்சமென்பாய்த்
தளர்ந்திங் கிருத்தல் தவிர்திகண் டாய்தள ராதுவந்தி
வளர்ந்துந்து கங்கையும் வானத் திடைவளர் கோட்டுவெள்ளை
இளந்திங் களும்எருக் கும்இருக் குஞ்சென்னி ஈசனுக்கே.

1

 

25.ஈசன் அவனல்லாது இல்லை எனநினைந்து
கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து - பேசி
மறவாது வாழ்வாரை மண்ணுலகத் தென்றும்
பிறவாமைக் காக்கும் பிரான். 

2

24. கட்டளைக் கலித்துறையும், நேரிசை வெண்பாவும் அந்தாதியாய் மாறி மாறி வர இருபது பாடல்களால் தொகுக்கப்படுவது. ‘இரட்டைமணி மாலை’ என்னும் பிரபந்தம் ஆகும்.

அ. சொ. பொ.: ‘நெஞ்சமே ஈசனுக்கே வந்தி; வெந்துயர் வந்து அடும்போது அஞ்சி, என்பாய் இங்குத் தளர்ந்திருத்தலைத் தவிர்தி’ என இயைத்துக்கொள்க.

வெந்துயர் கிளர்ந்து. வந்து அடும் போது - கொடிய துன்பம் மிகுந்து வந்து வருத்தும்போது. என்பாய்த் தளர்ந் திருத்தல் - உடம்பு எலும்பாய் இளைத்துப் போகும்படி மெலிந் திருத்தல். வளர்ந்து உந்து கங்கை - பெருகி மோதுகின்ற கங்கை. கோட்டுத் திங்கள் - வளைவையுடைய சந்திரன். “ஈசனுக்கு” என்பதை, ‘ஈசனை’ எனத் திரிக்க. தளராது வந்தி - மனம் சலியாது வணங்கு.

‘சிவனை மனம் சலியாது வணங்குவாரைத் துயர்வந்து அணுகாது’ என்றதாம்.

25. அ. சொ. பொ.: ஈசன் - ஐசுவரியம் உடையவன்; அஃதாவது, உயிர்களாகிய அறிவுடைப் பொருள்களை அடிமைகளாகவும், ஏனை அறிவிலாப் பொருள்களை