190. | வெண்பா விரித்துரைக்கும் போழ்தில் விளங்கொளிசேர் கண்பாவு நெற்றிக் கறைக்கண்டன் - விண்பால் |
191. | அரிஅரணஞ் செற்றாங்(கு) அலைபுனலும் பாம்பும் புரிசடைமேல் வைத்த புராணன் - எரிஇரவில் |
192. | ஆடும் இறைவன், அமரர்குழாம் தற்சூழ மாட மறுகில் வரக்கண்டு - கேடில்சீர் |
193. | வண்ணச் சிலம்படி மாதரார் தாம்உண்ட கண்ணெச்சில் எம்மையே ஊட்டுவான் - அண்ணலே |
194. | வந்தாய்; வளைகவர்ந்தாய்; மாலும் அருந்துயரும் தந்தாய் இதுவோ தகவுஎன்று - நொந்தாள்போல் |
195. | கட்டுரைத்துக் கைசோர்ந்து அகமுருகி மெய்வெளுத்து மட்டிவரும் பூங்கோதை மால்கொண்டாள் - கொட்டிமைசேர் |
196. | பண்ணாரும் இன்சொற் பணைப்பெருந்தோள் செந்துவர்வாய்ப் பெண்ஆர வாரம் பெரிதன்றே - விண்ணோங்கி |
197. | மஞ்சடையும் நீள்குடுமி வாள்நிலா வீற்றிருந்த செஞ்சடையான் போந்த தெரு. |
| பெண்ணீர்மை காமின்; பெருந்தோளி ணைகாமின்; உண்ணீர்மை மேகலையும் உள்படுமின் - தெண்ணீரக் காரேறு கொன்றையந்தார்க் காவாலி கட்டங்கன் ஊரேறு போந்த துலா. |
திருச்சிற்றம்பலம்
‘அஃதான்று’ என்பது பாடம் அன்று. ‘இசையின் கண் கேளா என உருபு விரித்துரைக்க. கண்ணி - 191, 192: அரி - காற்று. ‘விண்பால் காற்றுப் போல விரைந்து செல்கின்ற அரணம்’ என்க. இவை திரிபுரம். ஆங்கு - அதுபோல. ‘இரவில் எரி ஆடும் இறைவன்’ என்க. கண்ணி - 193 - 195: ‘சிலம்படியையுடைய மாதாரார்’ என்க. மால் - மயக்கம். நொந்தாள் போல் - வெறுத்தாள்போல. “கை சோர்ந்து” என்பதில் கை, இடைச் சொல். மட்டு - தேன். இவரும் - கொப்புளிக்கின்ற. கண்ணி - 195 -197: “கொட்டு இமை சேர் பெண்” என்றது, ‘மானுடப் பெண் இனம்’ என்றபடி.
|