| 326. | மகிழந்தலரும் வண்கொன்றை மேலே மனமாய் நெகிழ்ந்து நெகிழ்ந்துள்ளே நெக்குத் - திகழ்ந்திலங்கும் விண்ணுறங்கா வோங்கும் வியன்கயிலை மேயாய்என் பெண்ணுறங்காள்; என்செய்கேன்? பேசு. | | 27 | | 327. | பேசும் பாசறியாள் பேதை; பிறர்க்கெல்லாம் ஏசும் பரிசானாளே; பாவம்! - மாசுனைநீர் காம்பையலைத் தாலிக்கும் காளத்தி என்றென்று பூம்பயலை மெய்ம்முழுதும் போர்த்து. | | 28 | | 328. | போர்த்த களிற்றுரியும், பூண்ட பொறியரவும் தீர்த்த மகளிருந்த செஞ்சடையும் - மூர்த்தி குயிலாய மென்மொழியாள் கூறாய வாறும் கயிலாயா, யான்காணக் காட்டு. | | 29 | | 329. | காட்டில் நடம்ஆடிக் கங்காளர் ஆகிப், போய் நாட்டிற் பலிதிரிந்து நாள்தோறும் - ஓட்டுண்பார் |
326.குறிப்புரை: 'திகழ்ந்திலங்கும் ... என் பெண்' என்பதை முதலிற் கூட்டுக. மகிழ்தல், இங்கு விரும்புதலைக் குறித்தது. 'விண் நிறத்தோடு' என்று ஓடுருபு தொகுக்கப்பட்டது. விண்ணின் நிறம் புகைமை. அஃது இங்கு இருளைக் குறித்தது. கா - சோலை. இது கயிலைப் பெருமான்மேல் காதல் கொண்டாள் ஒருத்திதன் செவிலித் தாய் கூற்று. 327. குறிப்புரை: "மா சுனை நீர்" என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. காம்பு - மூங்கில். ஆலித்தல் - ஒலித்தல். பூம் பசலை - பூப்போலும் பசலை. 'பூ, பீர்க்கம் பூ' என்பது மரபு பற்றிக் கொள்ளப்படும். போர்த்து - போர்க்கப்பட்டு. பேசும் பரிசு - வேறொன்றைப் பற்றியும் பேசும் தன்மை. "பேதை" என்றது சிலேடை பரிசு - தன்மை. 'தன்மை யுடையளாயினார்' என்க, ஏகாரம், தேற்றம் "பாவம்" என்பது, இரக்கம் பற்றி வந்தது. இதுவும் மேலைத் துறை. 328. குறிப்புரை: 'போர்வையாகப் போர்த்த' எனவும், 'பூணாகப் பூண்ட' எனவும் உரைக்க. உரி - தோல், பொறி - புள்ளி. தீர்த்த மகள், கங்கை. மூர்த்தி - வடிவம். இதனை முதற்கண் வைத்து, 'கூறும் ஆயவாறு' என உம்மையை மாறிக் கூட்டி, 'ஆயவாறு காட்டு' என முடிக்க. இது சிவபெருமானது உருவத்தை நினையும் பாட்டாய் அமைதலை யறிக. 329. குறிப்புரை: கங்காளா - எலும்புக் கூட்டைத் தோளில் கொண்டவர். 'நாட்டில் போய்த் திரிந்து' என்க. பலி - பிச்சை
|