பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை320

தாதை; ஒருமிடல் திருவடி வாயினை,
தருமம் மூவகை உலகம் உணரக்
கூறுவை; நால்வகை
இலக்கண இலக்கியம் நலத்தக மொழிந்தனை;
40ஐயங்கணை யவனொடு காலனை அடர்த்தனை;

அறுவகைச் சமயமும் நெறிமையில் வகுத்தனை,
ஏழின் ஓசை இராவணன் பாடத்
தாழ்வாய்க் கேட்டவன் தலையளி பொருத்தினை,
ஆறிய சிந்தை யாகி,ஐங்கதித்

45தேரொடு திசைசெல விடுத்தோன்

நாற்றோள் நலனே நந்திபிங் கிருடியென்(று)
ஏற்ற பூதம் மூன்றுடன் பாட
இருகண் மொந்தை ஒருகணம் கொட்ட
மட்டுவிரி அலங்கல் மலைமகள் காண

50நடடம் ஆடிய நம்ப, அதனால்

மிடல் - வலிமை. (அடி-37, 38) ‘தருமம் கூறுவை’ என இயையும். (அடி - 38, 39) ‘நால்வகை இலக்கணங்களையும், அவற்றையுடைய இலக்கியங்களையும் மொழிந்தனை’ என்க. நால்வகை இலக்கணமாவன ‘எழுத்து, சொல், பொருள், செய்யுள்’ என்பன பற்றியவை, அணியிலக்கணம் வடநூற் கொள்கை. (அடி - 41) நெறிமையில் நெறியாம் வகையில்.

(அடி - 42) ‘ஏழ் இன் ஓசை’ என்க. ஓசை - இசை. (அடி - 43) தாழ்வு - இரக்கம். “அவன்தலை” என்பதில் தலை ஏழன் உருபு. அளி - அருள், (அடி - 44) ஆறிய - தணிந்த, சிந்தையனை, “சிந்தை” என்றது ஆகுபெயர் (அடி - 45) ஐங்கதி குதிரைகளின் ஓட்டத்தின் வகை. ‘ஐங்கதியொடு தேர் திசை செல விடுத் தோன்’ - என மாற்றி யுரைக்க. தேர் விடுத்தோன் பிரமன். (அடி - 46, 47) அவனுக்கு முகம் நான்காயினும் தோளும் நான்கே. நலன், இங்குத் திறமை. ‘அதனைப் பாட’ என்க. நந்தி பிங்கிருடி - நந்தி கணத்ததாகிய பிங்கிருடி “பூதம் மூன்று” என்றதனால், தண்டி, குண்டோதரன் இவர் கொள்ளப்பட்டனர், (அடி - 48) கண் - பக்கம். மொந்தை, ஒருவகை வாச்சியம். ஒரு கணம் - ஒப்பற்ற கணங்கள் மட்டு விரி - தேனோடு மலரும் (அடி - 50) “அதனால்” என்றது, கூறிவந்தவை அனைத்தையும் தொகுத்துக் குறித்தது. ஆகையால் இப்பாட்டினை, ‘நம்ப, நீ ஓர் உடம்பு ஈருருவாயினை; கொன்றை சூடினை;....... அளி பொருந்தினை, அதனால், சிறியேன் சொன்ன வாசகம் வறிதெனக் கொள்ளா யாகல்