| சிறியேன் சொன்ன அறிவில் வாசகம் வறிதெனக் கொள்ள யாகல் வேண்டும்; வெறிகமழ் கொன்றையொடு வெண்ணில வணிந்து கீதம் பாடிய அண்ணல் | 55 | பாதம் சென்னியிற் பரவுவன் பணிந்தே. |
வெண்பா | பணிந்தேன்நின் பாதம் பரமேட்டீ பால்நீ றணிந்தால வாயில் அமர்ந்தாய் - தணிந்தென்மேல் மெய்யெரிவு தீரப் பணித்தருளு வேதியனே ஐயுறவொன் றின்றி அமர்ந்து. |
திருச்சிற்றம்பலம்
வேண்டும்; (அதன்பொருட்டு) அண்ணலாகிய நின் பாதம் சென்னியிற் பணிந்து பரவுவன்’ என இயைத்து முடிக்கற் பாற்று. (அடி - 52) வறிது - பொருளற்றது. வெறி - நறுமணம். ‘சிவபெருமான் ஊழியிறுதியில் வீணை வாசித்திருப்பன்’ என்பதை, | ‘பெருங்கடல் மூடிப் பிரளயங் கொண்டு | | பிரமனும்போய், | | இருங்கடல் மூடி யிறக்கும்; இறந்தான் | | களேபரமும், | | கருங்கடல் வண்ணன் களேபர முங்கொண்டு | | கங்காளராய் | | வருங்கடல் மீளநின்(று) எம்மிறை நல்வீணை | | வாசிக்குமே’1 |
என்னும் அப்பர் திருமொழியால் அறிக. முக்காலத்தும் நிகழற் பாலதனை, “பாடிய” என இறந்த காலத்தில் வைத்துக் கூறினார். திருஎழுகூற்றிருக்கை முற்றிற்று
1. திருமுறை - 4.112.7.
|