பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை326

ஈரமில் நெஞ்சத் திராவணன் தன்னை
வீரம் அழித்து விறல்வாள் கொடுத்தனை;
திக்கமர் தேவருடன் திருந்தாச் செய்கைத்
தக்கன் வேள்வியைத் தளரச் சாடினை;
50வேதமும் நீயே; வேள்வியும் நீயே;

நீதியும் நீயே; நிமலன் நீயே;
புண்ணியம் நீயே; புனிதன் நீயே;
பண்ணியன் நீயே; பழம்பொருள் நீயே;
ஊழியும் நீயே; உலகமும் நீயே;

55வாழியும் நீயே; வரதனும் நீயே;

தேவரும் நீயே; தீர்த்தமும் நீயே;
மூவரும் நீயே; முன்னெறி நீயே;
மால்வரை நீயே; மறிகடல் நீயே;
இன்பமும் நீயே; துன்பமும் நீயே;

60தாயும் நீயே; தந்தையும் நீயே;

விண்முதற்பூதம் ஐந்தவை நீயே;
புத்தியும் நீயே; முத்தியும் நீயே;
சொலற்கருந் தன்மைத் தொல்லோய் நீயே;
கூடல் ஆலவாய்க் குழகன் ஆவ(து)

65அறியா(து) அருந்தமிழ் பழித்தனன் அடியேன்
ஈண்டிய சிறப்பின் இணையடிக் கீழ்நின்று
வேண்டும் அதுஇனி வேண்டுவன் விரைந்தே.

அமர் தேவர் - திக்குப் பாலகர். (அடி - 53) பண்ணியன் - எல்லாவற்றையும் ஆக்கியவன் (அடி - 55) வாழி - கால எல்லையின்றி வாழ்பவன். (அடி - 57) முன் நெறி - எல்லா நெறி கட்கும் முன்னதாய நெறி. (அடி - 62) புத்தி - போகம். முத்தி - மோட்சம் (அடி - 64) குழகன் - அழகன் (அடி - 64) ஆவது - பின் விளைவது (அடி - 64, 65) ‘ஆவது அறியாது குழகனாகிய நினது அருந்தமிழைப் பழித்தனன்’ என மொழி மாற்றி யுரைக்க (அடி - 66) ஈண்டிய சிறப்பின் இணையடி - இங்குச் சொல்லப் பட்டவற்றுடன் மற்றும் பலவாகத் திரண்ட சிறப்புக்களை யுடைய இணையடி. (அடி - 66, 67) இனி - இப்பொழுது. இதனை மேல் (அடி - 65) “அடியேன்” என்றதற்கு முன்னே கூட்டுக. (அடி - 67) வேண்டும் அது - எனக்கு வேண்டுவனவற்றை வேண்டிப் பெறுதலாகிய அதனையே. விரைந்து வேண்டுவன் - சற்றும் தாழாது விரும்புகின்றேன் ‘தாழாது விரும்புகின்றேன்’ என்றது. ‘முன்பு இருந்த நிலையினின்றும் நான் மாறிவிட்டேன்’ என்பதைக் குறித்தபடி.