பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை328

நக்கீரதேவ நாயனார்
அருளிச் செய்த

14. கோபப் பிரசாதம்

அகவற்பா
திருச்சிற்றம்பலம்

487.தவறுபெரி துடைத்தே! தவறுபெரி துடைத்தே!
வெண்திரைக் கருங்கடல் மேல்துயில் கொள்ளும்
அண்ட வாணனுக்(கு) ஆழிஅன் றருளியும்
உலகம் மூன்றும் ஒருங்குடன் படைத்த
5மலரோன் தன்னை வான்சிரம் அரிந்தும்

கான வேடுவன் கண்பரிந் தப்ப
வான நாடு மற்றவற் கருளியும்
கடிபடு பூங்கணைக் காம னாருடல்
பொடிபட விழித்தும் பூதலத் திசைந்த

10மானுட னாகிய சண்டியை

வானவன் ஆக்கியும்
மறிகடல் உலகின் மன்னுயிர் கவரும்
கூற்றுவன் தனக்கோர் கூற்றுவ னாகியும்
கடல்படு நஞ்சங் கண்டத் தடக்கியும்

15பருவரை சிலையாப் பாந்தள் நாணாத்

487. கோபம் - வெகுளி. அஃது ஆகு பெயராய் அதனால் நிகழ்த்திய செயல்களைக் குறித்தது. பிரசாதம் - அருள். அதுவும் அவ்வாறு அதனால் நிகழ்த்திய செயல்களைக் குறித்தது. கோபமும் அருள் காரணமாகவே எழுந்தமையின் இங்குக் கூறப்படும் இருவகை நிகழ்ச்சிகளும் முறையே ‘மறக் கருணை, அறக் கருணை’ - எனப்படும்.

(அடி - 1) ஈற்றயல் அடியில் வரும் “கூற்றம்” என்பதை முதல் அடிக்கும் கூட்டி, ‘என்னை’ என்னும் வினாவருவிக்க. (அடி - 3) அண்ட வாணன் - தேவன். கடல் மேல் துயில் கொள்ளும் தேவன் திருமால். ஆழி - சக்கரம். மலரோன் - பிரமன். பிரமனைச் சிரம் அரிந்த வரலாறு மேல் பெருந்தேவ பாணி உரையில் கூறப்பட்டது. (அடி - 6) வேடுவன், கண்ணப்ப நாயனார். இவர் வரலாறு இத்திருமுறையில் வேறு பாடல்களிலும், பெரிய புராணத்திலும்