நக்கீரதேவ நாயனார் அருளிச் செய்த 16. போற்றித் திருக்கலிவெண்பா திருச்சிற்றம்பலம் 496. | | 1. | திருத்தங்கு மார்பின் திருமால் வரைபோல் எருத்தத் திலங்கியவெண் கோட்டுப் - பருத்த | | | 2. | குறுத்தாள், நெடுமூக்கிற் குன்றிக்கண் நீல நிறத்தாற் பொலிந்து, நிலம்ஏழ் - உறத்தாழ்ந்து | | | 3. | பன்றித் திருவுருவாய்க் காணாத பாதங்கள் நின்றவா நின்ற நிலைபோற்றி! - அன்றியும் | | | 4. | புண்டரிகத் துள்ளிருந்த புத்தேள் கழுகுருவாய் அண்டரண்டம் ஊடுருவ ஆங்கோடிப் - பண்டொருநாள் | | | 5. | காணான் இழியக் கனக முடிகவித்துக் கோணாது நின்ற குறிபோற்றி! - நாணாளும் |
496. சிவபெருமானது திருப்புகழ் ஒவ்வொன்றையும் தனித்தனி எடுத்துக் கூறிப் போற்றி கூறும் கலிவெண்பா யாப்பிற்றாகிய செய்யுளாதல் பற்றி இது ‘போற்றித் திருக்கலி வெண்பா’ எனப் பெயர் பெற்றது. பஃறொடை வெண்பாவே பிற்காலத்தில் ‘கலிவெண்பா’ எனப் பெயர் பெற்றது. கண்ணி - 1, 2, 3 (1) திருமால் வராக வடிவம் கொண்டு திருவடியைத் தேடிக் காணாமை இவற்றால் கூறப்பட்டது. முதற்கண் உள்ள திரு, இலக்குமி. ‘எருத்தத்து இலங்கிய, வெண் கோடு முதலாக நீல நிறம் முடிவான இவற்றால் பொலிந்து வரைபோலும் பன்றி’ என்க. வரை - மலை. எருத்தம் -பிடரி ‘எருத்தத்தால்’ என உருபு விரிக்க. ‘குறுந்தாள்’ என்பது வலிந்து நின்றது. தாள் - கால். குன்றிக் கண் - குன்றி மணிபோலும் கண்கள் ‘பன்றித் திருஉருவாய் நிலம் ஏழ் உறத் தாழ்ந்து காணாத பாதங்கள்’ என இயைக்க. நிலம், இங்குப் பாதல உலகங்கள். நின்றவா நின்ற நிலை - என்றும் ஒரு பெற்றியன வாய்த் திரிபின்றி நிற்கும் நிலை. (இதற்குப்) போற்றி - வணக்கம். கண்ணி - 3,4.5: புண்டரிகம் - தாமரை மலர். அதனுள் இருந்த புத்தேள், பிரம தேவன். ‘பறவை’ என்னும் சாதி பற்றி
|