பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை346

31.தானவர்கட் காற்றாது தன்னடைந்த நன்மைவிறல்
வானவர்கள் வேண்ட மயிலூரும் -கோனவனைச்

32.சேனா பதியாகச் செம்பொன் முடிகவித்து
வானாள வைத்த வரம்போற்றி! - மேனாள்

33.அதிர்த்தெழுந்த அந்தகனை அண்டரண்டம் உய்யக்
கொதித்தெழுந்த சூலத்தாற் கோத்துத் - துதித்தங்(கு)

34.அவனிருக்கும் வண்ணம் அருள்கொடுத்தங் கேழேழ்
பவமறுத்த பாவனைகள் போற்றி! - கவைமுகத்த

மூவெயில் செற்ற ஞான்றுய்ந்த மூவரில்

இருவர் நின்திருக் கோயிலின் வாய்தல்

காவ லாளரென் றேவிய பின்னை

ஒருவன் நீ கரி காடரங் காக

மானை நோக்கிஒர் மாநடம் மகிழ

மணிமுழா முழக்க அருள் செய்த

தேவ தேவ1

உய்யவல் லார்ஒரு மூவரைக் காவல் கொண்டு
எய்யவல் லானுக்கே உந்தீபற2

என்னும் திருமுறைகளைக் காண்க. அமர்ந்து - விரும்பி. நிகழ்வித்து - யாவரும் அறியச் செய்து. ‘நடை காவலால்’ என உருபு விரிக்க. நடை - ஒழுக்கம். காவல் - அதனைக் காத்துக் கொள்ளுதல். காத்துக் கொண்டவர் அம்மூவர். கடை - வாயில்.

கண்ணி - 30, 31, 32: ‘காவல் விடை’ என மாற்றி, ‘வாயில் காவலர் பால் விடை பெற்று அடைந்த வானவர்கள்’ என உரைக்க. தானவர்கள் - அசுரர்கள். மயில் ஊரும் கோன், முருகன். முருகனை வான் ஆள வைத்தமையால் அவன் அசுரரை அழித்து வானவரை வாழச் செய்தான் என்க.

கண்ணி - 32, 33, 34: அந்தகன் - அந்தகாசுரன். அண்டர் அண்டம் - தேவர் உலகம். ‘அந்தகாசுரனை வைரவர் சூலத்தாற் குத்தி எடுத்து உயரத் தூக்கி வைத்திருக்க, அவன் அகந்தை அடங்கிப் பல நாள் துதிசெய்தமையால் கீழே விடுத்து முத்தியடையச் செய்தார்’ என்பது புராணம். பவம் - பிறப்பு. பாவனை - நினைவு; சங்கற்பம்.


1. திருமுறை - 7.55.8.

2. திருவாசகம் - திருவுந்தியார் - 4.