பக்கம் எண் :

349திருமுருகாற்றுப்படை

நக்கீரதேவ நாயனார்
அருளிச் செய்த

17.திருமுருகாற்றுப்படை

திருச்சிற்றம்பலம்

அகவற் பா

முருகன் சிறப்பு

497.உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்(கு)
ஓவற இமைக்குஞ் சேண்விளங்(கு) அவிரொளி
உறுநர்த் தாங்கிய மதன்உடை நோன்தாள்
5.செறுநர்த் தேய்த்த செல்உறழ் தடக்கை

மறுவில் கற்பின் வாள்நுதல் கணவன்
கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை
வாள்போழ் விசும்பின் வள்உறை சிதறித்
தலைப்பெயல் தலைஇய தண்ணறுங் கானத்(து)

10.இருள்படப் பொதுளிய பராஅரை மராஅத்(து)

உருள்பூந் தண்தார் புரளும் மார்பினன்,
மால்வரை நிவந்த சேண்உயர் வெற்பில்
கிண்கிணி கவைஇய ஒண்செஞ் சீறடிக்
கணைக்கால், வாங்கிய நுசுப்பின் பணைத்தோள்

15.கோபத் தன்ன தோயாப் பூந்துகில்

பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல்
கைபுனைந்(து) இயற்றாக் கவின்பெறு வனப்பின்
நாவலொடு பெயரிய பொலம்புனை அவிரிழைச்
சேண்இகந்து விளங்கும் செயிர்தீர் மேனித்

20.துணையோர் ஆய்ந்த இணையீர் ஓதிச்

செங்கால் வெட்சிச் சீறிதழ் இடையிடுபு
பைந்தாள் குவளைத் தூஇதழ் கிள்ளித்
தெய்வ உத்தியொடு வலம்புரிவயின் வைத்துத்
திலகம் தைஇய தேங்கமழ் திருநுதல்

25.மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத்

துவர முடித்த துகள்அறு முச்சிப்
பெருந்தண் சண்பகம் செரீஇக் கருந்தகட்(டு)