இரவலன் நிலை | சேவடி படரும் செம்மல் உள்ளமொடு நலம்புரி கொள்கைப் புலம்பிரிந்(து) உறையும் செவ்வுநீ நயந்தனை ஆயின் பலவுடன் | 65. | நன்னர் நெஞ்சத்(து) இன்நசை வாய்ப்ப இன்னே பெறுதிநீ முன்னிய வினையே; |
திருப்பரங்குன்றம் | செருப்புகன்(று) எடுத்த சேண்உயர் நெடுங்கொடி வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப் பொருநர்த் தேய்த்த போரரு வாயில் | 70. | திருவீற் றிருந்த தீதுதீர் நியமத்து மாடம்மலி மறுகின் கூடற் குடவயின் இருஞ்சேற்(று) அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த முள்தாள் தாமரைத் துஞ்சி வைகறைக் கள்கமழ் நெய்தல் ஊதி எற்படக் | 75. | கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர் அம்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும் குன்(று)அமர்ந்(து) உறைதலும் உரியன்; அதாஅன்று, |
திருச்சீரலைவாய் | வைந்நுதி பொருத வடுஆழ் வரிநுதல் | 80. | வாடா மாலை ஒடையொடு துயல்வரப், படுமணி இரட்டும் மருங்கின் கடுநடைக் கூற்றத் தன்ன மாற்றரும் மொய்ம்பின் கால்கிளர்ந் தன்ன வேழம்மேல் கொண்(டு) ஐவேறு உருவின் செய்வினை முற்றிய | 85. | முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி மின்உறழ் இமைப்பில் சென்னிப் பொற்ப நகைதாழ்பு துயல்வரூஉம் வகையமை பொலங்குழை சேண்விளங் கியற்கை வாள்மதி கவைஇ அகலா மீனின் அவிர்வன இமைப்பத் | 90. | தாவில் கொள்கைத் தம்தொழில் முடிமார் |
|
|
|