பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை352

மனன்நேர்(பு) எழுதரு வாள்நிற முகனே
1மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப்
பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம்;2 ஒருமுகம்,
ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக்
95.காதலின் உவந்து வரங்கொடுத் தன்றே;3 ஒருமுகம்

மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்வியோர்க் கும்மே;4 ஒருமுகம்,
எஞ்சிய பொருள்களை ஏம்உற நாடித்
திங்கள் போலத் திசைவிளக் கும்மே;5 ஒருமுகம்,

100.செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக்

கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே;6 ஒருமுகம்
குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே; ஆங்குஅம்
மூவிரு முகனும் முறைநவின்(று) ஒழுகலின்

105.ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பில்

செம்பொறி வாங்கிய மொய்ம்பில் சுடர்விடுபு
வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள்
1விண்செலல் மரபின் ஐயர்க் கேந்தியது ஒருகை;
2உக்கம் சேர்த்தியது ஒருகை;

110.3நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை

அசைஇய(து) ஒருகை;
4அங்குசம் கடாவ ஒருகை5,6 இருகை
ஐயிரு வட்டமொடு எஃகுவலம் திரிப்ப;
7ஒருகை மார்பொடு விளங்க;

115.8ஒருகை தாரொடு பொலிய;9 ஒருகை

கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப;
10ஒருகை பாடின் படுமணி இரட்ட;
11ஒருகை நீல்நிற விசும்பின் மலிதுளி பொழிய;
12ஒருகை வான்அர மகளிர்க்கு வதுவை சூட்ட

120.ஆங்(கு)அப்

பன்னிரு கையும் பாற்பட இயற்றி
அந்தப் பல்லியம் கறங்கத் திண்காழ்
வயிர்எழுந்(து) இசைப்ப வால்வளைஞரல
உரம்தலைக் கொண்ட உரும்இடி முரசமொடு

125.பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ