| மனன்நேர்(பு) எழுதரு வாள்நிற முகனே 1மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப் பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம்;2 ஒருமுகம், ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக் |
95. | காதலின் உவந்து வரங்கொடுத் தன்றே;3 ஒருமுகம் மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வியோர்க் கும்மே;4 ஒருமுகம், எஞ்சிய பொருள்களை ஏம்உற நாடித் திங்கள் போலத் திசைவிளக் கும்மே;5 ஒருமுகம், |
100. | செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக் கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே;6 ஒருமுகம் குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின் மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே; ஆங்குஅம் மூவிரு முகனும் முறைநவின்(று) ஒழுகலின் |
105. | ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பில் செம்பொறி வாங்கிய மொய்ம்பில் சுடர்விடுபு வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள் 1விண்செலல் மரபின் ஐயர்க் கேந்தியது ஒருகை; 2உக்கம் சேர்த்தியது ஒருகை; |
110. | 3நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇய(து) ஒருகை; 4அங்குசம் கடாவ ஒருகை5,6 இருகை ஐயிரு வட்டமொடு எஃகுவலம் திரிப்ப; 7ஒருகை மார்பொடு விளங்க; |
115. | 8ஒருகை தாரொடு பொலிய;9 ஒருகை கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப; 10ஒருகை பாடின் படுமணி இரட்ட; 11ஒருகை நீல்நிற விசும்பின் மலிதுளி பொழிய; 12ஒருகை வான்அர மகளிர்க்கு வதுவை சூட்ட |
120. | ஆங்(கு)அப் பன்னிரு கையும் பாற்பட இயற்றி அந்தப் பல்லியம் கறங்கத் திண்காழ் வயிர்எழுந்(து) இசைப்ப வால்வளைஞரல உரம்தலைக் கொண்ட உரும்இடி முரசமொடு |
125. | பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ
|