பக்கம் எண் :

353திருமுருகாற்றுப்படை

விசும்(பு)ஆறாக விரைசெலல் முன்னி
உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர்
அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே,
அதாஅன்று,

திருஆவினன்குடி

130.சீரை தைஇய உடுக்கையர், சீரொடு

வலம்புரி புரையும் வால்நரை முடியினர்,
மாசற விளங்கும் உருவினர், மானின்
உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்
என்பெழுந்து இயங்கும் யாக்கையர், நன்பகல்

135.பலவுடன் கழிந்த உண்டியர், இகலொடு

செற்றம் நீக்கிய மனத்தினர், யாவதும்
கற்றோர் அறியா அறிவினர், கற்றோர்க்குத்
தாம்வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு
கடுஞ்சினம் கடிந்த காட்சியர், இடும்பை

140.யாவதும் அறியா இயல்பினர், மேவரத்

துனியில் காட்சி முனிவர் முன்புகப்
புகைமுகந் தன்ன மாசில் தூவுடை
முகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச்
செவிநேர்பு வைத்துச்செய்வுறு திவவின்

145.நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்

மென்மொழி மேவலர் இன்னரம்(பு) உளர,
நோயின் றியன்ற யாக்கையர், மாவின்
அவிர்தளிர் புரையும் மேனியர், அவிர்தொறும்
பொன்னுரை கடுக்குந் திதலையர், இன்னகைப்

150.பருமம் தாங்கிய பணிந்தேந் தல்குல்

மாசில் மகளிரொடு மறுவின்றி விளங்கக்,
கடுவொ(டு) ஒடுங்கிய தூம்புடை வாலெயிற்(று)
அழலென உயிர்க்கும், அஞ்சுவரு கடுந்திறல்
பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொழுஞ்சிறைப்

155.புள்ளணி நீள்கொடிச் செல்வனும், வெள்ளேறு

வலவயின் உயரிய பலர்புகழ் திணிதோள்
உமைஅமர்ந்து விளங்கும் இமையா முக்கண்
மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்,