| நூற்றுப்பத் தடுக்கிய நாட்டத்து நூறுபல் | 160. | வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்(து) ஈரிரண்(டு) ஏந்திய மருப்பின் எழில்நடைத் தாழ்பெருந் தடக்கை உயர்த்த, யானை எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும், நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய | 165. | உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப் பலர்புகழ் மூவரும் தலைவர்ஆக ஏமுறு ஞாலம் தன்னில் தோன்றித் தாமரை பயந்த தாவில் ஊழி நான்முக ஒருவற் சுட்டிக் காண்வரப் | 170. | பகலில் தோன்றும் இகலில் காட்சி நால்வே றியற்கைப் பதினொரு மூவரோ(டு) ஒன்பதிற் றிரட்டி உயர்நிலை பெறீஇயர் மீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்பு வளிகிளர்த் தன்ன செலவினர், வளியிடைத் | 175. | தீயெழுந் தன்ன திறலினர், தீப்பட உரும்இடித் தன்ன குரலினர், விழுமிய உறுகுறை மருங்கில்தம் பெறுமுறை கொண்மார் அந்தரக் கொட்பினர் வந்துடன் காணத் தாவில் கொள்கை மடந்தையொடு, சின்னாள் | 180. | ஆவி னன்குடி அசைதலும் உரியன்; அதாஅன்று, |
திருஏரகம் | இருமூன்(று) எய்திய இயல்பினின் வழாஅ(து) இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி அறுநான் கிரட்டி இளமை நல்லியாண்(டு) | 185. | ஆறினில் கழிப்பிய அறன்நவில் கொள்கை மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்(து) இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல, ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண் புலராக் காழகம் புலர உடீஇ, | 190. | உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்(து) |
|
|