பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை356

பழமுதிர்சோலை

சிறுதினை மலரொடு விரைஇ, மறிஅறுத்து,
225.வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ

ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும்,
ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்,
வேலன் தைஇய வெறிஅயர் களனும்,
காடும், காவும், கவின்பெறு துருத்தியும்,

230.யாறுங், குளனும், வேறுபல் வைப்பும்,

சதுக்கமும், சந்தியும், புதுப்பூங் கடம்பும்,
மன்றமும், பொதியிலுங், கந்துடை நிலையினும்
மாண்தலைக் கொடியொடு மண்ணி அமைவர,
நெய்யோடு ஐயவி அப்பி ஐதுரைத்துக்

235.குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி

முரண்கொள் உருவின் இரண்டுடன் உடீஇச்
செந்நூல் யாத்து, வெண்பொரி சிதறி,
மதவலி நிலைஇய மாத்தாள் கொழுவிடைக்
குருதியொ(டு) விரைஇய தூவெள் அரிசி

240.சில்பலிச் செய்து, பல்பிரப்பு இரீஇச்

சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப்
பெருந்தண் கணவீரம் நறுந்தண் மாலை
துணையற அறுத்துத் தூங்க நாற்றி,
நளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி,

245.நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி,

இமிழிசை அருவியொ(டு) இன்னியம் கறங்க,
உருவப் பல்பூத் தூஉய், வெருவரக்
குருதிச் செந்தினை பரப்பிக், குறமகள்
முருகியம் நிறுத்து முரணினர் உட்க

250.முருகாற்றுப் படுத்த உருகெழு வியல்நகர்

ஆடுகளம் சிலம்பப் பாடிப், பலவுடன்
கோடுவாய் வைத்துக், கொடுமணி இயக்கி,
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி,
வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட

255.ஆண்டாண் டுறைதலும் அறிந்த வாறே,