பக்கம் எண் :

357திருமுருகாற்றுப்படை

ஆண்டாண் டாயினும் ஆக, காண்தக
முந்துநீ கண்டுழி முகனமர்ந் தேத்திக்,
கைதொழூஉப் பரவிக், காலுற வணங்கி,
நெடும்பெரும் சிமையத்து நீலப் பைஞ்சுனை
260.ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப,

அறுவர் பயந்த ஆறமர் செல்வ!
ஆல்கெழு கடவுட் புதல்வ, மால்வரை
மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே!
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ!

265.இழையணி சிறப்பிற் பழையோள் குழவி!

வானோர் வணங்குவில் தானைத் தலைவ!,
மாலை மார்ப! நூலறி புலவ!
செருவில் ஒருவ! பொருவிறல் மள்ள!
அந்தணர் வெறுக்கை! அறிந்தோர் சொல்மலை!

270.மங்கையர் கணவ! மைந்தர் ஏறே!

வேல்கெழு தடக்கைச் சால்பெரும் செல்வ!
குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து,
விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ!
பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே!

275.அரும்பெறல் மரபிற் பெரும்பெயர் முருக!

நசையுநர்க் கார்த்தும் இசைபேர் ஆள!
அலந்தோர்க் களிக்கும் பொலம்பூண் சேஎய்!
மண்டமர் கடந்தநின் வென்றா(டு) அகலத்துப்
பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேள்!

280.பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்!

சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி!
போர்மிகு பொருந! குரிசில்! எனப்பல
யான்அறி அளவையின் ஏத்தி, ஆனாது
நின்அளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின்

285.நின்னடி உள்ளி வந்தனன், நின்னொடு

புரையுநர் இல்லாப் புலமை யோய்!எனக்
குறித்தது மொழியா அளவையில், குறித்துடன்
வேறுபல் உருவில் குறும்பல் கூளியர்
சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி,

290.அளியன் தானே; முதுவாய் இரவலன்