பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை358

வந்தோன், பெருமநின் வண்புகழ் நயந்தென
இனியவும், நல்லவும் நனிபல ஏத்தித்,
தெய்வம் சான்ற திறல்விளங்(கு) உருவின்
வான்தோய் நிவப்பின் தான்வந் தெய்தி,
295.அணங்குசால் உயர்நிலை தழீஇப், பண்டைத்தன்

மணங்கமழ் தெய்வத்(து) இளநலம் காட்டி,
அஞ்சல் ஓம்புமதி, அறிவல்நின் வர(வு)என
அன்புடை நன்மொழி அளைஇ, விளிவுஇன்(று)
இருள்நிற முந்நீர் வளைஇய உலகத்(து)

300.ஒருநீ யாகித் தோன்ற, விழுமிய

பெறலரும் பரிசில் நல்கும்மதி, பலவுடன்
வேறுபல் துகிலின் நுடங்கி, அகில்சுமந்(து)
ஆரம் முழுமுதல் உருட்டி, வேரல்
பூவுடை அலங்குசினை புலம்ப வேர்கீண்டு

305.விண்பொரு நெடுவரைப் பரிதியில் தொடுத்த

தண்கமழ் அலர்இறால் சிதைய,நன்பல
ஆசினி முதுசுளை கலாவ, மீமிசை
நாக நறுமலர் உதிர, ஊகமொடு
மாமுக முகக்கலை பனிப்பப், பூநுதல்

310.இரும்பிடி குளிர்ப்ப வீசிப், பெருங்களிற்று

முத்துடை வான்கோடு தழீஇத் தத்துற்று
நன்பொன் மணிநிறம் கிளரப், பொன்கொழியா,
வாழை முழுமுதல் துமியத் தாழை
இளநீர் விழுக்குலை உதிரத் தாக்கிக்

315.கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற

மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக்
கோழி வயப்பெடை இரியக் கேழலொ(டு)
இரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன
குரூஉமயிர் யாக்கைக் குடாஅடி உளியம்

320.பெருங்கல் விடர்அளைச் செறியக், கருங்கோட்(டு)

ஆமா நல்ஏறு சிலைப்பச், சேண்நின்(று)
இழுமென இழிதரும் அருவிப்
பழமுதிர் சோலை மலைகிழ வோனே.

திருச்சிற்றம்பலம்

திருமுருகாற்றுப்படைமுற்றிற்று