பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை406

அவனுகந் தியங்கிய இடம்முனி வனமதுவே; அவன்
செருப்படி யாவன விருப்புறு துவலே;
எழிலவன் வாயது தூயபொற் குடமே;
அதனில் தங்குநீர் கங்கையின் புனலே;
105.புனற்கிடு மாமணி அவன்நிரைப் பல்லே;

அதற்கிடு தூமலர் அவனது நாவே;
உப்புனல் விடும்பொழு துரிஞ்சிய மீசைப்
புன்மயிர் குசையினும் நம்முடிக் கினிதே; அவன்தலை
தங்கிய சருகிலை தருப்பையிற் பொதிந்த

110.அங்குலி கற்பகத் தலரே; அவனுகந்(து)

இட்ட இறைச்சி எனக்குநன் மாதவர்
இட்ட நெய்பால் அவியே;
இதுவெனக் குனக்கவன்
கலந்ததோர் அன்பு காட்டவன்; நாளை

115.நலந்திகழ் அருச்சனை செய்தாங்(கு) இருவென்று

இறையவன் எழுந் தருளினன்
அருளலும் மறையவன் அறிவுற் றெழுந்து
மனமிகக் கூசி வைகறைக் குளித்துத்
தான்முன் செய்வதோர்

120.பொற்புடைப் பூசனை புகழ்தரச் செய்து

நிலைப் புணர்ச்சியில் மகர ஈறு கெட்டு நின்றது. “உமையொடு” என்பதில், கூடிய என ஒருசொல் வருவிக்க. மருங்கு - பக்கம். “காட்டியருளி” என்பது ஒருசொல். புரிவு -விருப்பம்; கருணை ‘குணம்’ என அடையின்றிக் கூறியவழி அது நற்குணத்தையே குறிக்கும். அஃது இங்கு ஆகுபெயராய் அதனால் விளைந்த சிறப்புக்களைக் குறித்தது. ‘அவன் வேடன் அல்லன்; மா தவன்’ என்க. முனி வனம் - முனிவனுக்கு உரித்தாயவனம். அது, பகுதிப் பொருள் விகுதி. துவல் - தளிர். புனற்கு - புனற்கண்; உருபு மயக்கம். மா மணி - உயர்ந்த இரத்தினங்கள். அதற்கு - புனற்கு. “உப்புனல்” என்பதில் உகரச் சுட்டு மேலிடம் பற்றி வந்தது. உறிஞ்சுதல் - உராய்தல், ‘உரிநுதல்’ என்றல் பழைய வழக்கு. புன் மயிர் - கீழ்மையை யுடைய மயிர். குசை - தருப்பை. வழிபாட்டினை ஏற்பவற்றில் சிறப்புடையன திருவடிகளே யாதலின், “நம் அடிக்கு” என அவற்றையே கூறினார். தருப்பையின் பொதிந்த - தருப்பையால் நிரம்பிய. ‘செய்யப்பட்டு முடிந்த’ என்றபடி. அங்குலி - மோதிரம்; பவித்திரம். ‘பவித்திரத்தோடு