பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை408

தோன்றா வண்ணம் இருந்தன னாக, இரவியும்
வான்தனி முகட்டில் வந்தழல் சிந்தக்
கடும்பகல் வேட்டையிற் காதலித் தடித்த
உடம்பொடு சிலைகணை உடைத்தோல் செருப்புத்
125.தொடர்ந்த நாயொடு தோன்றினன் தோன்றலும்

செல்வன் திருக்கா ளத்தியுள் அப்பன்
திருமேனியின் மூன்று கண்ணாய்
ஆங்கொரு கண்ணிலும் உதிரம்
ஒழியா தொழுக இருந்தன னாகப்

130.பார்த்து நடுக்குற்றுப் பதைத்து மனஞ்சுழன்று

வாய்ப்புனல் சிந்தக் கண்ணீர் அருவக்
கையில் ஊனொடு கணைசிலை சிந்த
நிலம்படப் புரண்டு நெடிதினில் தேறிச்
சிலைக்கொடும் படைகடி தெடுத்(து)இது படுத்தவர்

135.அடுத்தவிவ் வனத்துளர் எனத்திரிந் தாஅங்கு

இழிந்தனவேயாய் வெறுப்பைத் தருதல் பெறப்படும். இம்முறை உலகியலிலும் உள ஆதலை நினைக.

அடி-117, 121: இப்பகுதி கனவு கண்ட பின் சிவகோசரியார் செய்தவற்றைக் கூறியது. கூசியது, தாம் உண்மையறியாது வெறுத்ததை நினைந்து. “குளித்து” என்றது உபலக்கணம் ஆதலின், ‘பிற கடன்களை முடித்து’ என்பதும் கொள்க. இதன் பின் ‘சென்று’ என ஒருசொல் வருவிக்க.

அடி-121, 125: இப்பகுதி கண்ணப்பர் காளத்தியப்பர்பால் வந்த நிலைமையைக் கூறியது. “இரவி அழல் சிந்த” என்றது, உச்சிப்போது ஆயினமையைக் குறித்தது. தடிந்த உடும்பு - கொல்லப்பட்ட உடும்பு. அது பாகமாக்கப்படவில்லை. இறைவற்கு நகை தோற்றுவிக்க அன்பினால் கொண்டு வரப் பட்டது.

அடி-125, 129: “தான்” என்பதை ஒழித்து ஓதுவதும், ஒரு கண்ணிலும் உம்மை சேர்த்து ஓதுவதும் பாடங்கள் அல்ல.

அடி-130 - 147: இப்பகுதி இறைவன் கண்ணப்பரது அன்பைச் சிவகோசரியார்க்குக் காட்டுதற் பொருட்டுச் செய்ததையும், அதனால் கண்ணப்பர்பால் நிகழ்ந்த அருஞ் செயல்களையும் கூறியது. நெக்கு நெக்கு இழிதல் - தடைகளைக் கடந்து கடந்து ஒழுகுதல். கனற்றி - துயரத்தால் மனம் புழுங்கி அரற்றி. இத்தனை தரிக்கிலன் - இவ்வளவு பெருந் துன்பத்தைக் காண இனி நான் பொறேன், “அப்பியும்”