| திருவார்ந்த செம்முகத்துக் கார்மதங்கள்சோர வருவான்தன் நாமம் வரும். | | 17 |
கட்டளைக் கலித்துறை 517. | வருகோள் தருபெருந் தீமையும், காலன்தமரவர்கள் அரு(கு)ஒட் டருமவ ராண்மையும் காய்பவன்,கூர்ந்தன்பு தருகோள் தருமர பிற்பத்தர் சித்தத்தறியணையும் ஒருகோட்(டு) இருசெவி முக்கண்செம் மேனியஒண்களிறே. | | 18 |
வெண்பா 518. | களியானைக், கன்றைக் கணபதியைச்,செம்பொன் ஒளியானைப் பாரோர்க்(கு) உதவும் - அளியானைக் கண்ணுவதும், கைத்தலங்கள் கூப்புவதும்,மற்றவன்தாள் நண்ணுவதும் நல்லார் கடன். | | 19 |
- அழகு 'நெற்றி மருங்கு ஆரச் செவிகளை வீசி, முகத்தில் மதங்கள் சோர தன் நாமம் என்னோடு வரும்' என இயைத்து முடிக்க.நாமம் உடன் வருதலாவது, ஓரிடத்தில் நில்லாதுநடந்து சென்றாலும் நாமங்களை உச்சரித்துக்கொண்டே நடத்தலாம். "செம்முகத்துக்கார்மதம்" என்பது முரண் தொடை. 517. குறிப்புரை: வரு கோள் - தசா புத்திகளாகவும்,பிறவாறாகவும் வந்து பற்றுகின்ற கிரகங்கள். அருகுஒட்டரும் - அருகினின்றும் அப்பாற்போகும்படிதுரத்த இயலாத. அரும், பண்படியாகப் பிறந்த குறிப்புவினைப் பெயரெச்சம். அவர், காலன் தமர் (தூதுவர்).அன்பு தருகோள் தரும் மரபின் பத்தர் - அன்பினால்தரப்படும் கொள்கையால் தரப்படும் நெறிமுறைகளையுடைய அடியார். 'அன்பு காரணமாகவே வழிபடும்அடியார்கள்' என்றபடி சித்தத் தறி - உள்ளமாகியதறி; "தறி" என்றது அவர் கருது கோள் பற்றி,உருவகம் அன்று. 'தறியை அணையும் களிறு' என இயையும்."ஒரு கோட்டுச் செம்மேனிய களிறு" என்றது.'இஃதோர் அதிசயக் களிறு' என்றபடி. களிறு -முகத்தால் யானையாகியவன். எனவே, "களிறு"என்றது 'யானைபோல்பவன்' என உவமை யாகுபெயர்.ஆகுபெயர் அல்லாக்கால், "காய்பவன்" எனஉயர்திணை வினையோடு இயையாது. ஏகரம் பிரிநிலை.'களிறே தீமையும். ஆண்மையும் காய்பவன்' என இயைத்துமுடிக்க. 'ஆதலின் அவனையே அடைக' என்பதுகுறிப்பெச்சம். 518. குறிப்புரை: களி - மதக் களிப்பு. மதம், இங்குஅருள். "யானைக் கன்று" என்பது, 'கன்றாகியயானை' என்னும் பண்புத்
|