பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை430

கட்டளைக் கலித்துறை

525.தாமரைக் கோவும்நன் மாலும் வணங்கத்தலையிடத்துத்
தாம்அரைக் கோவணத் தோ(டு)இரந் துண்ணினுஞ்,சார்ந்தவர்க்குத்

யிஷ்யந்தி மாநவா: ததாசிவ மவிஜ்ஞாயதுக்கஸ்யாந்தோ பவிஷ்யதி!!" என்னும்சுருதியையும்1 அதனை மொழி பெயர்த்து,

பரசிவ னுணர்ச்சி யின்றிப்

பல்லுயிர்த் தொகையுமென்றும்

விரவிய துயர்க்கீ றெய்தி

வீடுபே றடைது மென்றல்,

உருவமில் விசும்பிற் றோலை

உரித்துடுப் பதற்கொப்பென்றே

பெருமறை பேசிற் றென்னில்,

பின்னும்ஒர் சான்று முண்டோ

எனக் கந்த புராணமும்,2

மானுடன் விசும்பைத் தோல்போற்

சுருட்டுதல் வல்ல னாயின்

ஈனமில் சிவனைக் காணாது

இடும்பைதீர் வீடும் எய்தும்;

மானமார் சுருதி கூறும்

வழக்கிவை யாத லாலே

ஆனமர் இறையைக் காணும்

உபாயமே அறிதல் வேண்டும்

எனக் காஞ்சிப்புராணமும்3 கூறுவனவற்றையும்,மற்றும்

அவனவ ளதுவெனு மனவதொ றொன்றும்இச்
சிவனலால் முத்தியில் சேர்த்து வார் இலை;
துவளரும் இம்முறை சுருதி கூறுமால்;
இவனடி வழிபடின் முத்தி எய்துவாய்

என அக்காஞ்சிப் புராணமும்4 கூறுதலையும்காண்க.

525. குறிப்புரை:ஈற்றடியை முதலிற்கூட்டி யுரைக்க. தாமரைக்கோ - பிரமன். தலை யிடம் -வாயிற் படியிடம். 'தாம் அரையிலே கோவணத்தோடுஇரந்து உண்ணினும்' என்க


1. சுவேதாசுவதர உபநிடதம்
2. தட்ச காண்டம் - உபதேசப் படலம் - 25.
3. சனற்குமார படலம் - 43.
4. திருநெறிக் காரைக்காட்டுப் படலம் - 29.