577. | அயமால்ஊண்; ஆடரவம் நாண(து) அதள(து) ஆடை அயமாவ(து) ஆனே(றுஆ)ர் ஆரூர் - அயமாய என்னக்கன், தாழ்சடையன், நீற்றன் எரியாடி என்னக்கன் றாழும் இவள். | | 21 |
578. | ஆழும் இவளையுங் கையலஆற் றேனென்(று) ஆழும் இவளை அயராதே - ஆழும் சலமுடியாய் சங்கரனே சங்கக் குழையாய், சலமுடியா தின்றருள்வாய் தார். | | 22 |
வெறியாரும் ஆகிய அடியார்களது நோயைத்தீர்க்கும் அருமருந்தாம் ஆரூர்க்கோன் அல்லனோ'என இயைத்து முடிக்க. 'அங்ஙன மாக, நீ பிரறரைநாடியலைதல் எற்றுக்கு' என்பது குறிப்பெச்சம் இனி,"அயன்" என்பதைப் போலியாக்காமல், 'அயன்முதலாகிய காரணக் கடவுளர்களும் அவனே யன்றோ' எனமுடிப்பினும் ஆம். 577.குறிப்புரை: "அயம் ஆல்ஊண்" என்பதில், "ஊண்" என்பதை முதலிற்கூட்டுக. ஆல், அசை, 'ஐயம்', அயம் எனப் போலியாய்வந்தது. ஐயம் - பிச்சை. அதள் - தோல்."அயமாவது" என்பதில், குதிரையை உணர்த்துவதாய"அயம்" என்னும் பெயர் இங்குப் பொதுப்பட'ஊர்தி' என்னும் பொருட்டாய் நின்றது. அடியின்இறுதியிலும், 'ஐயம்' என்பது போலியாய்"அயம்" என வந்தது. ஐயம், இங்கு, சந்தேகம்.ஐயம் மாய - சந்தேகம் நீங்க இதனை, "ஆழும்"என்பதற்குமுன் கூட்டுக. நக்கன். உடை உடாதவன்.உரிமை பற்றி, "என் நக்கன்" எனத் தம்தமனாக்கிக் கூறினார். 'ஆடிபால்' என ஏழாவதுவிரிக்க. 'இவள் என் நக்கு அன்று ஆழும்' என இயைத்துமுடிக்க. நகுதல் - மகிழ்தல்; விரும்புதல். அன்று -அவனைக் கண்ட அன்றே. ஆழும் - காதல் வெள்ளத்தில்ஆழ்வாள். 'என் நக்கனுக்கு ஊண் ஐயம்; நாண் அரவு;ஆடை அதள்; அய.மாவது ஆனேறு; ஊர் ஆரூர்; (அங்ஙனமாக,அவன்பால்) இவள் என் நக்கு அன்று முதலாக ஐயம் மாயஆழும்' என இயைத்து முடிக்க. இதுவும் பழிப்பது போலச்சிவபெருமானது வசிகரத்தைப் புகழ்ந்தவாறு. 578.குறிப்புரை: ஆழும் சலமுடியாய் - வீழ்வார் அமிழ்ந்து போதற்குரியநீரையணிந்த முடியை உடையவனே. இதனுடன்பிறவற்றையும் முதலிற் கூட்டுக. முதற்கண் உள்ள,"ஆழும் இவ்வளையும் கை அல; ஆற்றேன்" என்பதுகாதல் கொண்டாள் ஒருத்தியது கூற்று. "வளை"என்பது ஆகு பெயராய், நிலத்தை வளைத்துள்ள கடல்அலைகளைக் குறித்தது. கை - ஒழுக்கம், அஃதாவது,பிறர்மாட்டு இரக்கம், ஒழுக்கம் உடையவற்றை'ஒழுக்கம்' என்றே கூறினார். கடல் அலை எழுப்பும்ஒசை காதலால்
|