669. | திரியும் புரம்எரித்த சேவகனார், செவ்வே திரியும் புரம்எரியச் செய்தார், - திரியும் அரிஆன் திருக்கயிலை என்னாதார் மேனி அரிஆன்(று) இருக்கயிலை யாம். | | 13 |
670. | (இப்பாட்டில் முதல் அடி கிடைக்கவில்லை) ஆம்பரிசே செய்தங் கழியாக்கை - ஆம்பரிசே ஏத்தித் திரிந்தானை, எம்மானை, அம்மானை ஏத்தித் திரிந்தானை ஏத்து. | | 14 |
671. | ஏத்துற்றுப் பார்த்தன் எழில்வான் அடைவான்போல் ஏத்துற்றுப் பார்த்தன் இறைஞ்சுதலும் - ஏத்துற்றுப் பாசுபதம் அன்றளித்த பாசூரான், பால்நீற்றான் பாசுபதம் இன்றளியன் பால். | | 15 |
‘நெஞ்சே’ - என்பதை முதலில் வருவித்துக் கொள்க. ‘கங்கைதனைக் காணாய்; உமையைக் காணாய்; காணா (கண்டு), நச்சி, திரி’ என இயைத்து முடிக்க. உடை தலை - உடைந்த தலை; வினைத் தொகை. “ஊர் ஊர்” என்னும் அடுக்கு இரண்டில் முன்னது பொதுவாயும், பின்னது ‘அவனது ஊர்’ எனச் சில தலங்களைக் குறிக்கும் சிறப்பாயும் நின்றன. இரண்டிலும் ‘தோறும்’ என்பது வருவிக்க. கார் உரு - நீல நிறம். நச்சுதல் - விரும்புதல். உடைதல் - நெகிழ்ந்து உருகுதல். 669. குறிப்புரை: திரியும் புரம் - வானத்தில் சுழலுகின்ற ஊர்கள்; முப்புரம். செவ்வே - முறையாக. திரியும் - பரிணமித்து வளர்கின்ற. புரம் - பல வகை உடம்புகளை, எரியச் செய்தார் - அழித்தார்; “தேவர்களையும் அழித்தார்” என்றபடி. திரியும் - உலாவுகின்ற. அரி - சிங்கம். “ஆன்” என்றது ஆமாவை. என்னாதார் - என்று சொல்லாதவர்கள். அரி ஆன்று இருக்கை இலை - அழகு நிறைந்து இருத்தல் இல்லை. ‘இருக்கை’ என்பது எதுகை நோக்கிப் போலியாய் வந்தது. ஆம், அசை. 670. (இப்பாட்டின் முதல் அடி கிடையாமையால், பொருளை நன்குணரவும் இயலவில்லை) 671. குறிப்புரை: முதல் அடியில் உள்ள “பார்த்தன்” என்பதை முதலில் கூட்டுக. பார்த்தன் - அருச்சுனன். ஏத்து உற்று - துதித்தலைப் பொருந்தி. ஏ - உயரம். ஏத்து - ‘உயரத்திலே உற்றுப் பார்த்து’ என்க. வான் அடைவான் போல் உயரத்திலே உற்றுப் பார்த்து நிற்றல் அவனது தவ நிலையாகும். இதனை,
|