753. | எமையாள வந்தார் இடரான தீர, எமையாளும் எம்மை இமையோர், - எமையாளும் வீதிவிடங் கர்,விடம துண்டகண் டர்,விடையூர் வீதிவிடங் கர்,விடையூர் தீ. | | 97 |
754. | தீயான மேனியனே! செம்பவளக் குன்றமே! தீயான சேராமற் செய்வானே! - தீயான செம்பொற் புரிசைத் திருவாரூ ராய்என்னைச் செம்பொற் சிவலோகஞ் சேர். | | 98 |
755. | சேர்கின்ற சிந்தை சிதையாமல் செய்வானே! சேர்கின்ற சிந்தை சிதையாமல் - சேர்கின்றோம்; ஒற்றியூ ரானே! உறவாரும் இல்லை,இனி ஒற்றியூ ரானே உறும். | | 99 |
அண்மையிலிருக்க இடம் ஈந்த இறைவர்’ என்க. அடி-4-ல் உள்ள தொடரை. ‘எமை ஈங்கு ஓய மலையார்’ என மாற்றி உரைத்துக் கொள்க. ‘ஓய’ என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. ஓய - மெலியும்படி மலையார் - வருத்தார்; ‘வருத்தத்தைத் தீர்ப்பார்’ என்பதாம். திருஈங்கோய் மலை, திருச்சிரா மலை இவை சோழ நாட்டுத் தலங்கள். 753. குறிப்புரை: முன்னிரண்டு அடிகளில் மடக்கணி வாராது சொற்பொருட் பின்வருநிலையணியே வந்தது. ‘இடரான தீர எமை ஆள வந்தார்’ எனவும், ‘எம்மையும் எமையாளும் இமையோர்’ எனவும் மாற்றுக. வந்தார் - எம்பால் வந்தார். வினைப் பெயர். ‘எம்மையும்’ என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று எம்மையும் - எப்பிறப்பிலும். “வீதி” இரண்டில் முன்னது ஒளி, பின்னது தெரு “விடங்கர்” இரண்டில் முன்னது அழகர்; பின்னது சுயம்பு மூர்த்தி. “விடை” இரண்டில் முன்னது இடபம்; பின்னது விடுத்தல்; ஏவுதல் அது ‘ஏவப்படும் பொருள்’ எனப் பொருள் தந்தது. “ஊர்” இரண்டில், முன்னது ஏறிச் செலுத்துதல்; வினைத்தொகையாய் வந்தது. பின்னது நகரம்; திரிபுரம். 754. குறிப்புரை: “தீ” மூன்றில் முதலது நெருப்பு; இடையது தீமை; இறுதியது ஒளி. புரிசை - மதில். ஈற்றடியில் “பொன்” என்றது பொருளை, செம்பொருள் - மெய்ப்பொருள்; அஃது ‘அழியாப் பொருள்’ எனப் பொருள் தந்தது. 755. குறிப்புரை: முன்னிரண்டடிகளில் சொற்பொருட் பின்வருநிலை யணியே வந்தது. பின் வந்த “சிதையாமல்” என்பது, ‘சிதையாமைப் பொருட்டு’. “ஒற்றியூர்” இரண்டில் முன்னது
|