பக்கம் எண் :

541சிவபெருமான் திருமும்மணிக்கோவை

அகவற்பா

760.சடையே,
நீரகம் ததும்பி நெருப்புக்கலிக் கும்மே!
மிடறே,
நஞ்சகம் துவன்றி, அமிர்துபிலிற் றும்மே!
வடிவே,
மிளியெரி கவைஇத் தளிர்தயங் கும்மே!
அடியே,
மடங்கல்மதம் சீறி, மலர்பழிக் கும்மே!
அஃதான்று,
இனையஎன் றறிகிலம் யாமே; முனைதவத்
தலைமூன்று வகுத்த தனித்தாள்
கொலையூன்று குடுமி நெடுவே லோயே.

4

வெண்பா

761.வேலை முகடும் விசும்பகடும் கைகலந்த
காலைநீர் எங்கே கரந்தனையால் - மாலைப்
பிறைக்கீறா கண்ணுதலா பெண்பாகா ஐயோ
இறைக்கூறாய் எங்கட் கிது.

5


அடியார்கள் இடுகின்ற புல்லிய எருக்கம் பூவும் உனது சடை முடிக்குப் பொருந்துமோ’ என்க. ‘அன்பர் இடுவன யாதாயினும் அதுவே பெருமானுக்கு மிகு விருப்பத்தைத் தருவது என்றபடி.

760. குறிப்புரை: ஈற்றயலடி முதலாகத் தொடங்கிஉரைக்க. மூன்று தலைகளையும், ஒற்றைக் காலையும் உடைய வேல் திரிசூலம். ஊன்றுதல் - சேர்த்தல். குடுமி - முனை - ‘சடை முதலாகச் சொல்லப்பட்டவற்றில் ஒவ்வொன்றும் தோற்றத் திலும், செயலிலும் நேர்மாறாய் உள்ளன. ஆகவே, அவைகளை எத்தன்மையுடையன - ஒரு பெற்றியவாகத் துணிய எங்களால் இயலவில்லை’ என்பதாம். முளி எரி - பிற பொருள்களை யெல்லாம் உலர்த்துகின்ற நெருப்பு. கவைஇ - கவித்து. தளிர் தயங்கும் - தளிர் விளங்கப்பெறும். மடங்கல் - யமன். முனை தவ - போரை மிகுதியாக உடைய ‘வேல்’ என்க. அஃதான்று - அதுவன்றி. இதனைச் சடை முதலிய எல்லாவற்றின் பின்னும் தனித்தனிக் கூட்டுக.

761. குறிப்புரை: ‘மாலைப் பிறைக் கீறா’..... போர்பாகா! - என்பதனை முதற்கண் கூட்டியுரைக்க. ‘கீற்றன்’ என்பது இடைக் குறைந்து ‘கீறன்’ என நின்ற விளியேற்றது. வேலை முகடு - கடலின்