பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை550

அகவற்பா

775.கொற்றத் துப்பின் பொற்றை ஈன்ற
சுணங்கையஞ் செல்வத் தணங்குதரு முதுகாட்டுப்
பேய்முதிர் ஆயத்துப் பிணவின் கொழுந!நின்
ஏர்கழல் கவைஇ இலங்கிதழ்த் தாமம்
தவழ்தரு புனல்தலைப் படுநர்
அவல மாக்கடல் அழுந்தலோ இலரே.

19

வெண்பா

776.இலர்கொலாம் என்றிளைஞர் ஏசப் பலிக்கென்(று)
உலகெலாஞ் சென்றழல்வ ரேனும் - மலர்குலாம்
திங்கட் குறுந்தெரியல் தேவர்க்காட் செய்வதே
எங்கட் குறும்;தெரியின் ஈண்டு.

20


என்பது ‘மாயோன்’ என்னும் ஒரு பெயர்த் தன்மைதாய், “அளந்த” என்னும் ஒரு பெயரெச்சத்திற்கு முடிவாயிற்று. ‘வள்ளி என்னும் கொடிச்சி’ எனவும், ‘கூந்தற் கொடிச்சி’ எனவும் தனித் தனி முடிக்க. கொடிச்சி - குறத்தி.

775. குறிப்புரை: கொற்றத் துப்பின் - வெற்றிக்கு ஏதுவான வலிமையை உடையவளும், பொற்றை ஈன்ற - மலையால் (மலையரசனால்) பெறப்பட்டவளும் சுணங்கு அம் செல்வத்து - தேமலின் அழகாகிய செல்வத்தை உடையவளும். (ஐ சாரியை) அணங்கு தரு முதுகாட்டு - அச்சத்தைத் தருகின்ற முதுகாட்டின்கண் வாழ்பவளும். பேய் முதிர் ஆயத்து - பேய்களாகிய முற்றிய சுற்றத்தை உடையவளும் ஆகிய பிணவின் கொழுந - மான்போன்றவளுக்குக் கணவனே. இங்ஙனம் வருணிக்கப்பட்டவள் காடுகிழாள். இவளும் சத்தியின் கூறாதல் பற்றி ‘மலையரையனால் பெறப்பட்டவள்’ என்றார். பொற்றை - மலை. ‘ஒற்றை’ என்பது பாடம் அன்று, ஏர் கழல் - அழகிய திருவடியை. சவைஇ - சூழ்ந்து. தாமம் தவழ் தரு புனல் - பூக்கள் மிதக்கின்ற நீர். தலைப் படுநர் - தங்கள் தலையிலே உறப் பெற்றவர்கள். “அழுந்தலோ” என்னும் ஓகாரம் சிறப்பு. ‘சிவபெருமானுடைய பாத தீர்த்தம் தலையிலே படப் பெற்றவர்களது துன்பங்கள் நீங்கி யொழியும்’ என்பது கூறியவாறு.

776. குறிப்புரை: இளைஞர் - அறிவு முதிரப் பெறாதவர் கள். இலர் என்று ஏச - ‘இவர் யாதொன்றும் இலராகிய நிச்சல் நிரப்புடையர்’ என்று சொல்லி இகழும்படி. தெரியின் - ஆராய்ந்து பார்த்தால். குறுந் தெரியல் - சிறிய மாலைக் கண்ணி. ஈண்டு