கட்டளைக் கலித்துறை 819. | நானே பிறந்த பயன்படைத் தேன்;அயன் நாரணனெம் கோனே எனத்தில்லை அம்பலத் தேநின்று கூத்துகந்த தேனே திருவுள்ள மாகியென் தீமையெல் லாமறுத்துத் தானே புகுந்தடி யேன்மனத் தேவந்து சந்திக்கவே. | | 10 |
சந்த விருத்தம் 820. | சந்து புனைய வெதும்பி, மலரணை | | தங்க வெருவி, இலங்கு கலையொடு | | சங்கு கழல, நிறைந்த அயலவர் | | தஞ்சொல் நலிய மெலிந்து, கிளியொடு | | பந்து கழல்கள் மறந்து தளிர்புரை | | பண்டை நிறமும் இழந்து, நிறையொடு | | பண்பு தவிர, அனங்கன் அவனொடு | | நண்பு பெருக விளைந்த இனையன; | | நந்தி முழவு தழங்க, மலைபெறு | | நங்கை மகிழ, அணிந்த அரவுகள் | | நஞ்சு பிழிய முரன்று, முயலகன் | | நைந்து நரல, அலைந்த பகிரதி | | அந்தி மதியொ டணிந்து திலைநகர் | | அம்பொன் அணியும் அரங்கின் நடம்நவில் | | அங்கண் அரசை அடைந்து தொழுதிவள் | | அன்று முதல் எதிர்இன்று வரையுமே. | | 11 |
என வினை முடிக்க. இதனால் திருநடனத்தின் ஆனந்தத்தது சிறப்புக் கூறப்பட்டது. 819. குறிப்புரை: “நானே பிறந்தபயன் படைத்தேன்” என்பதை இறுதிக்கண் கூட்டியுரைக்க. ‘எம் கோனே’ என்று சொல்லித் துதிப்பவர் அயனும். மாலும், என - என்று துதிக்கும் படி. “தேன்” என்றது சிவபெருமானை. “தேனே” என்னும் பிரிநிலை ஏகாரம்,‘யான் வேண்டாமல் இருக்கவும் தானாகவே திருவுள்ளம் செய்தான்’ எனப் பொருள் தந்தது. ‘தானே திருவுள்ளம் செய்து, தானே புகுந்தான்’ என்க. 820. குறிப்புரை: “நந்தி முழவு தழங்க” என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. தழங்க- ஒலிக்க. ‘நஞ்சு பிழிய முரன்று’ என இயைத்து, “முரன்று”என்பதையும் ஏனையவற்றோடு இயைய, ‘முரல’ எனத் திரிக்க. முரல - மூச்சொலி செய்ய. நரல - ஓலம் இட. ‘முழவு
|