| உலகம் மூன்றும் அளந்துழி ஆங்கவன் ஈரடி நிரம்பிற்றும் இலவே; தேரில் உரைப்போர்க் கல்ல தவன்குறை வின்றே; இனைய னாகியதனிமுதல் வானவன் |
15 | கேழல்திருவுரு ஆகி, ஆழத்(து) அடுக்கிய ஏழும் எடுத்தனன்; எடுத்தெடுத்து ஊழி ஊழி கீழுறக் கிளைத்தும் காண்பதற் கரியநின் கழலும்,வேண்டுபு நிகில லோகமும் நெடுமறைத் தொகுதியும் |
20 | அகிலசராசரம் அனைத்தும் உதவிய பொன்னிறக் கடவுள் அன்னமாகிக் கண்டி லாதநின் கதிர்நெடு முடியும் ஈங்கிவை கொண்டு, நீங்காது விரும்பிச் சிறிய பொதுவின் மறுவின்றி விளங்கி |
25 | ஏவருங் காண ஆடுதி; அதுவெனக்(கு) அதிசயம் விளைக்கும் அன்றே; அதிசயம் விளையாதும் ஒழிந்த தெந்தை!வளையாது கல்லினும் வலிஅது நல்லிதிற் செல்லாது தான்சிறிதாயினும் உள்ளிடை நிரம்ப |
30 | வான்பொய், அச்சம், மாயா ஆசை மிடைந்தன கிடப்ப, இடம்பெறல்அருமையில் ஐவர் கள்வர் வல்லிதிற் புகுந்து மண்மகன் திகிரியில் எண்மடங்க கழற்ற ஆடுபுகிடந்த பீடில் நெஞ்சத்து |
35 | நுழைந்தனைபுகுந்து தழைந்தநின் சடையும் செய்ய வாயும் மையமர் கண்டமும், நெற்றியில் திகழ்ந்த ஒற்றை நாட்டமும், எடுத்து பாதமும் தடுத்தசெங் கையும், புள்ளி ஆடையும் ஒள்ளிதின் விளங்க |