| அருளா வயவர் அம்பிடை நடந்தும், இருளுறு பவ்வத்(து) எந்திரங் கடாஅய்த் துன்றுதிரைப் பரப்பிற் குன்றுபார்த் தியங்கியும், ஆற்றல் வேந்தர்க்குச் சோற்றுக்கடன் பூண்டும், | 10 | தாள்உழத்தோடியும் வாளுழந் துண்டும், அறியா ஒருவனைச் செறிவந்து தெருட்டியும், சொற்பல புனைந்தும்,கற்றன கழறியும் குடும்பப் பாசம் நெடுந்தொடர்ப்பூட்டி ஐவர் ஐந்திடத் தீர்ப்ப நொய்தில் | 15 | பிறந்தாங்கிறந்தும், இறந்தாங்கு பிறந்தும் கணத்திடைத் தோன்றிக் கணத்திடைக் கரக்கும் கொப்புட் செய்கை ஒப்பில் மின்போல் உலப்பில் யோனிக் கலக்கத்து மயங்கியும் நெய்யெரி வளர்த்துப் பெய்முகிற் பெயல்தரும் | 20 | தெய்வவேதியர் தில்லை மூதூர் ஆடகப் பொதுவில் நாடகம் நவிற்றும் கடவுட் கண்ணுதல் நடம்முயன் றெடுத்த பாதப் போதும், பாய்புலிப் பட்டும், மீதியாத் தசைத்த வெள்ளெயிற் றரவும், | 25 | சேயுயர்அகலத்(து) ஆயிரங் குடுமி மணிகிடந் திமைக்கும் ஒருபே ராரமும், அருள்பொதிந் தலர்ந்த திருவாய் மலரும், நெற்றியில்திகழ்ந்த ஒற்றை நாட்டமும் கங்கை வழங்கும்திங்கள் வேணியும் | 30 | கண்ணிடைப் பொறித்து மனத்திடை அழுத்தி,ஆங்(கு) உள்மகிழ்ந் துரைக்க உறுதவஞ் செய்தனன் நான்முகன் பதத்தின் மேல்நிகழ் பதந்தான்; உறுதற் கரியதும் உண்டோ! பெறுதற் கரியதோர் பேறுபெற் றேற்கே. | | 20 |
மேற்கொள்ளப்படும் பலவகையான தொழில்கள் இங்குக் குறிக்கப்பட்டன. உழந்து - உழுது. கார் - மழை.கிளை உடன் தவிர - சுற்றத்தார் பலரும் இல்லத்திலே இருந்துவிடத் தான் மட்டும். ‘பதி’ என வழங்கி, ‘எந்த ஊர் நல்ல ஊர்’ என ஆராய்ந்து சென்று. அருளாவயவர் - இரக்கம் காட்டாத படைவீரர். அம்பிடை நடத்தல்
|