வெண்பா 834. | நாயனைய என்னைப் பொருட்படுத்தி நன்களித்துத் தாயனைய னாயருளும் தம்பிரான் - தூயவிரை மென்துழாய் மாலொடயன் தேட வியன்தில்லை மன்றுளே ஆடும் மணி. | | 25 |
கட்டளைக் கலித்துறை 835. | மணிவாய் முகிழ்ப்பத் திருமுகம் வேர்ப்பஅம் மன்றுக்கெல்லாம் அணிவாய் அருள்நடம் ஆடும் பிரானை அடைந்துருகிப் பணியாய் புலன்வழி போம்நெஞ்ச மேயினிப் பையப்பையைப் பிணியாய்க் கடைவழி சாதியெல் லோரும் பிணமென்னவே. | | |
என்! காவிரி ஆடில் என்!”1 எனத் தொடங்கும் திருப்பதிகத்துள்ளும். “விரதமே பரமாக வேதியரும் சரத மாகவே சாத்திரங் காட்டினர்”2 எனத் திருவாசகத்துள்ளும். ஆதிமறை ஒதி, அதன்பயன்ஒன்றும் அறியா வேதியர்சொல் மெய்யென்று மேவாதே3 எனச் சாத்திரத்துள்ளும் விலக்கப்பட்டமை காண்க. வளைவுணர்வு - கோணலான அறிவு. ஓகாரம். எதிர்மறை.இதனுள் “நுரையும், திரையும்” என்பது முதலாகப் போந்தஅடிகளைச் சிவஞான போதத்து இரண்டாம் சூத்திர மாபாடியத்துள் பிரம முதற்காரண வாத மறுப்பில் எடுத்துக்காட்டி. இதன் உண்மைப் பொருளைத் தெளிவுபடுத்தியிருத்தல்காண்க. நொப்புறு கொட்பு - கலங்கலையுடைய சுழல். வரையில் சீகரம் - மலைபோன்ற அலைகள். வாரி. சங்கு முதலியன வருவாய் குரை - ஒலிக்கின்ற. 834. குறிப்புரை: ‘மாலும், அயனும் தேடிக் காணா ராயினும் மன்றுளே ஆடுகின்றான்’ என்றபடி.‘தம் பிரான்’ என்பது ‘தமக்குப் பிரான்’ என்னும்பொருளதாயினும் இங்குப் பொதுப்படத் ‘தலைவன்’ என்னும் அளவாய் நின்றது. ‘மணி, என்னை அளித்து அருளும் தலைவன்’ எனமுடிக்க. அளித்து - காத்து. 835. குறிப்புரை: முகிழ்ப்ப - முறுவல்சிறிதே அரும்ப புலன் வழிப் பேர் - ஐம்புல வழியினின்றும் நீங்கு. கடை வழி - இறுதிக்
1. திருமுறை - 5. 2. போற்றித் திருஅகவல் - 50, 51 3. நெஞ்சுவிடு தூது - கண்ணி - 116.
|