பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை594

விருத்தம்

836.

என்நாம் இனிமட வரலாய் செய்குவ

தினமாய் வண்டுகள் மலர்கிண்டித்

தென்னா எனமுரல் பொழில்சூழ் தில்லையுள்

அரனார் திருமுடி அணிதாமம்

தன்னா லல்லது தீரா தென்னிடர்

தகையா துயிர்கரு முகிலேறி

மின்னா நின்றது துளிவா டையும்வர

வீசா நின்றது பேசாயே.

27

அகவற்பா

837.

பேசு வாழி பேசு வாழி
ஆசையொடு மயங்கி மாசுறு மனமே
பேசு வாழி பேசு வாழி
கண்டனமறையும் உண்டன மலமாம்

5

பூசின மாசாம் புணர்ந்தன பிரியும்

நிறைந்தன குறையும் உயர்ந்தன பணியும்
பிறந்தன இறக்கும் பெரியன சிறக்கும்
ஒன்றொன் றொருவழி நில்லா வன்றியும்
செல்வமொடு பிறந்தோர் தேசொடு திகழ்ந்தோர

10

கல்வியிற்சிறந்தோர் கடுந்திறல் மிகுந்தோர்


காலத்தில் பிணம் என்ன - முன்புசொன்ன பெயராலே சுட்டாமல். பிணம் என்னும் பெயராலே சுட்டும்படி. சாதி - சாவாய்.

836. குறிப்புரை: ‘மடவரலாய், கருமுகில் ஏறிமின்னா நின்றது; துனி வாடையும் வரவீசாநின்றது. அரனார் திருமுடி அணி தாமந்தன்னாலல்லது என் இடர் தீராது; உயிர் தகையாது; (அவரோ அதைத்தருவதாய் இல்லை) இனி நாம் என் செயகுவது பேசாய்’என இயைத்துக் கொள்க. இது. பருவம் கண்டு ஆற்றளாய கைக்கிளைத்தலைவி தூது விடக் கருதித் தோழியை நோக்கிக் கூறியது. “மடவரலாய்” என்றது தோழியை, தகையாது - தகைக்க (தடுக்க)ப்படாது.துனி வாடை - துன்பம் தருகின்ற வாடைக் காற்று.

837. குறிப்புரை: இதனுள் முதல் மூன்று அடிகள் இரட்டைத் தொடை. இடையே ஒருதொடர் மடுக்கப்பட்டமையால் அடுக்கு இசைநிறையாகாது பொருள் நிலையாய். வலிசெய்தற் பொருட்டாயிற்று.“வாழி” என்பன அசை. இவைகளை இறுதியிற் கூட்டியுரைக்க. நான்காவது முதல் ஏழு முடிய உள்ள அடிகளில்,