| கொடையிர் பொலிந்தோர் படையிற் பயின்றோர் குலத்தின் உயர்ந்தோர் நலத்தினின் வந்தோர் எனையர் எங்குலத்தினர் இறந்தோர் அனையவர் பேரும் நின்றில போலுந் தேரின் |
15 | நீயுமஃ தறிதி யன்றே மாயப் பேய்த்தேர் போன்றும் நீப்பரும் உறக்கத்துக் கனவே போன்றும் நனவுப்பெயர் பெற்ற மாய வாழ்க்கையை மதித்துக் காயத்தைக் கல்லினும் வலிதாக் கருதிப் பொல்லாத் |
20 | தன்மையர்இழிவு சார்ந்தனை நீயும் நன்மையில் திரிந்த புன்மையை யாதலின் அழுக்குடைப் புலன்வழி இழுக்கத்தின் ஒழுகி வளைவாய்த் தூண்டிலின் உள்ளிரை விழுங்கும் பன்மீன் போலவும் |
25 | மின்னுபு விளக்கத்து விட்டில் போலவும் ஆசையாம் பரிசத் தியானை போலவும் ஒசையின் விளிந்த புள்ளுப் போலவும் வீசிய மணத்தின் வண்டு போலவும் உறுவ துணராது செறுவழிச் சேர்ந்தனை |
30 | நுண்ணூல்நூற்றுத் தன்னகப் படுக்கும் அறிவில்கீடத்து நுந்துழி போல ஆசைச் சங்கிலிப் பாசத் தொடர்ப்பட்டு இடர்கெழு மனத்தினோ டியற்றுவ தறியாது குடர்கெழு சிறையறைக்(கு)உறங்குபு கிடத்தி |
35 | கறவை நினைந்த கன்றென இரங்கி மறவா மனத்து மாசறும் அடியார்க்(கு) அருள்சுரந் தளிக்கும் அற்புதக் கூத்தனை மறையவர் தில்லை மன்று ளாடும் இறையவன் என்கிலை என்நினைந் தனையே. |
| 28 |