பக்கம் எண் :

595கோயில் நான்மணிமாலை

கொடையிர் பொலிந்தோர் படையிற் பயின்றோர்
குலத்தின் உயர்ந்தோர் நலத்தினின் வந்தோர்
எனையர் எங்குலத்தினர் இறந்தோர் அனையவர்
பேரும் நின்றில போலுந் தேரின்

15

நீயுமஃ தறிதி யன்றே மாயப்

பேய்த்தேர் போன்றும் நீப்பரும் உறக்கத்துக்
கனவே போன்றும் நனவுப்பெயர் பெற்ற
மாய வாழ்க்கையை மதித்துக் காயத்தைக்
கல்லினும் வலிதாக் கருதிப் பொல்லாத்

20

தன்மையர்இழிவு சார்ந்தனை நீயும்

நன்மையில் திரிந்த புன்மையை யாதலின்
அழுக்குடைப் புலன்வழி இழுக்கத்தின் ஒழுகி
வளைவாய்த் தூண்டிலின் உள்ளிரை விழுங்கும்
பன்மீன் போலவும்

25

மின்னுபு விளக்கத்து விட்டில் போலவும்

ஆசையாம் பரிசத் தியானை போலவும்
ஒசையின் விளிந்த புள்ளுப் போலவும்
வீசிய மணத்தின் வண்டு போலவும்
உறுவ துணராது செறுவழிச் சேர்ந்தனை

30

நுண்ணூல்நூற்றுத் தன்னகப் படுக்கும்

அறிவில்கீடத்து நுந்துழி போல
ஆசைச் சங்கிலிப் பாசத் தொடர்ப்பட்டு
இடர்கெழு மனத்தினோ டியற்றுவ தறியாது
குடர்கெழு சிறையறைக்(கு)உறங்குபு கிடத்தி

35

கறவை நினைந்த கன்றென இரங்கி

மறவா மனத்து மாசறும் அடியார்க்(கு)
அருள்சுரந் தளிக்கும் அற்புதக் கூத்தனை
மறையவர் தில்லை மன்று ளாடும்
இறையவன் என்கிலை என்நினைந் தனையே.

28


காலம் காரணமாகப் பொருள்கள் மிகவிரைவில் நேர் மாறான நிலைகளை அடைதல் கூறும் முகத்தால் அவற்றது நிலையாமை விளக்கப்பட்டது. ஒன்று ஒன்ற - அது அது. இதில் முற்றும்மை தொகுக்கப்பட்டது. ஒரு வழி - ஒரு நிலையில். “அது அது” எனப்பட்டவை அனைத்தும் தொக்குப் பன்மையாதலின் “நில்லா”