| எனதெனக் கருதி இதற்கென்று தொடங்கிச் செய்தன சிலவே செய்வன சிலவே செய்யா நிற்பன சிலவே யவற்றிடை நன்றென்ப சிலவே தீதென்ப சிலவே |
15 | ஒன்றினும்படாதன சிலவே யென்றிவை கணத்திடை நினைந்து களிப்பவுங் கலுழ்பவும் கணக்கில் கோடித் தொகுதி அவைதாம் ஒன்றொன் றுணர்வுழி வருமோ வனைத்தும் ஒன்றா உணர்வழி வருமோ என்றொன்று |
20 | தெளிவுழித்தேறல் செல்லேம் அளிய மனத்தின் செய்கை மற்றிதுவே நீயே அரியை சாலவெம் பெரும தெரிவுறில் உண்டாய்த் தோன்றுவ யாவையும் நீயே கண்டனை அவைநினைக் காணா அதுதான் |
25 | நின்வயின்மறைத்தோ யல்லை யுன்னை மாயாய் மன்னினை நீயே வாழி மன்னியுஞ் சிறுமையிற் கரந்தோ யல்லை பெருமையிற் பெரியோய் பெயர்த்தும் நீயே பெருகியுஞ் சேணிடை நின்றோ யல்லை |
30 | தேர்வோர்க்குத்தம்மினும் அணியை நீயே நண்ணியும் நீயொன்றின் மறைந்தோ யல்லை இடையிட்டு நின்னை மறைப்பது மில்லை மறைப்பினும் அதுவும் நீயே யாகி நின்றதோர் நிலையே,அஃதான்று |
35 | நினைப்பருங்காட்சி நின்னிலை யிதுவே நினைப்புறுங் காட்சி எம்நிலை யதுவே இனிநனி இரப்பதொன் றுடையன் மனமருண்டு புன்மையின் திளைத்துப் புலன்வழி நடப்பினும் நின்வயின் நினைந்தே னாகுதல் நின்வயின் |
40 | நினைக்குமாநினைக்கப் பெறுதல் அனைத்தொன்றும் நீயே அருளல் வேண்டும் வேய்முதிர் கயிலை புல்லென எறிவிசும்பு வறிதாக இம்ப ருய்ய அம்பலம் பொலியத் திருவளர் தில்லை மூதூர் |
45 | அருநடங் குயிற்றும் ஆதிவா னவனே. |
| 32 |