பக்கம் எண் :

599கோயில் நான்மணிமாலை

எனதெனக் கருதி இதற்கென்று தொடங்கிச்
செய்தன சிலவே செய்வன சிலவே
செய்யா நிற்பன சிலவே யவற்றிடை
நன்றென்ப சிலவே தீதென்ப சிலவே

15

ஒன்றினும்படாதன சிலவே யென்றிவை

கணத்திடை நினைந்து களிப்பவுங் கலுழ்பவும்
கணக்கில் கோடித் தொகுதி அவைதாம்
ஒன்றொன் றுணர்வுழி வருமோ வனைத்தும்
ஒன்றா உணர்வழி வருமோ என்றொன்று

20

தெளிவுழித்தேறல் செல்லேம் அளிய

மனத்தின் செய்கை மற்றிதுவே நீயே
அரியை சாலவெம் பெரும தெரிவுறில்
உண்டாய்த் தோன்றுவ யாவையும் நீயே
கண்டனை அவைநினைக் காணா அதுதான்

25

நின்வயின்மறைத்தோ யல்லை யுன்னை

மாயாய் மன்னினை நீயே வாழி
மன்னியுஞ் சிறுமையிற் கரந்தோ யல்லை
பெருமையிற் பெரியோய் பெயர்த்தும் நீயே
பெருகியுஞ் சேணிடை நின்றோ யல்லை

30

தேர்வோர்க்குத்தம்மினும் அணியை நீயே

நண்ணியும் நீயொன்றின் மறைந்தோ யல்லை
இடையிட்டு நின்னை மறைப்பது மில்லை
மறைப்பினும் அதுவும்
நீயே யாகி நின்றதோர் நிலையே,அஃதான்று

35

நினைப்பருங்காட்சி நின்னிலை யிதுவே

நினைப்புறுங் காட்சி எம்நிலை யதுவே
இனிநனி இரப்பதொன் றுடையன் மனமருண்டு
புன்மையின் திளைத்துப் புலன்வழி நடப்பினும்
நின்வயின் நினைந்தே னாகுதல் நின்வயின்

40

நினைக்குமாநினைக்கப் பெறுதல் அனைத்தொன்றும்

நீயே அருளல் வேண்டும் வேய்முதிர்
கயிலை புல்லென எறிவிசும்பு வறிதாக
இம்ப ருய்ய அம்பலம் பொலியத்
திருவளர் தில்லை மூதூர்

45

அருநடங் குயிற்றும் ஆதிவா னவனே.

32