அகவற்பா 845. | ஈரவே ரித்தார் வழங்கு சடிலத்துக் குதிகொள் கங்கை மதியின்மீ தசைய வண்டியங்கு வரைப்பின் எண்தோள் செல்வ ஒருபால் தோடும் ஒருபால் குழையும் | 5 | இருபாற் பட்ட மேனி எந்தை ஒல்லொலிப் பழனத் தில்லை மூதூர் ஆடகப் பொதுவில் நாடகம் நவிற்றும் இமையா நாட்டத் தொருபெருங் கடவுள் வானவர் வணங்கும் தாதை யானே | 10 | மதுமழை பொழியும் புதுமந் தாரத்துத் தேனியங் கொருசிறைக் கானகத் தியற்றிய தெய்வ மண்டபத்(து) ஐவகை அமளிச் சிங்கஞ் சுமப்ப ஏறி மங்கையர் இமையா நாட்டத் தமையா நோக்கம் | 15 | தம்மார்பு பருகச் செம்மாந் திருக்கும் ஆனாச் செல்வத்து வானோர் இன்பம் அதுவே எய்தினும் எய்துக கதுமெனத் தெறுசொ லாளர் உறுசினந் திருகி எற்றியும் ஈர்த்தும் குற்றம் கொளீஇ | 20 | ஈர்ந்தும் போழ்ந்தும் எற்றுபு குடைந்தும் |
இதயங்களில் இவள் பிதற்றலின் காரணத்தை நீவிர் அறியவில்லை. (நீவிர் எப்படி அறிவீர்;) ‘தெய்வத்தைக் குறித்து வெறியாடுதற்கு வேண்டிய செம்மறியாட்டையும்,மதுவால் மயக்கப்படுகின்ற மயக்கத்தையும், மற்றும்பல உழைப்பையும் அல்லது வேறு ஒன்றையும் நீவிர் அறிய மாட்டீர் என்க. இத்தனையும் - ‘இவ்வளவுதானும்’ என இழிவுசிறப்பும்மை. 845. குறிப்புரை: ‘வேரி வழங்கு ஈரத்தார்ச் சடிலம்’ என்க. வேரி - தேனை. வழங்கு -ஊற்றுகின்ற - ஈரம் - குளிர்ச்சி வரைப்பு - எல்லை.வண்டுகள் தோளில் புரளும் மாலையின் தேனை உண்ண வந்து இயங்குகின்றன. தோடு பெண்பாற்கு உரியதும், குழை ஆண்பாற்கு உரியதும் ஆகலின் மேனி இருபாற்பட்டதாயிற்று. தேன்- வண்டுவகைகளில் ஒன்று - சிறை - பக்கம். அமளி - அணை.“மங்கையர் பருக” என இயையும் ‘இமையா நாட்டத்து அமையா நோக்கத்தால் பருக’ என்க. அமையா நோக்கம்- தெவிட்டாத
|