பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை606

சந்த விருத்தம்

848.

தொடர நரைத்தங்க முன்புள வாயின
தொழில்கள் மறுத்தொன்று மொன்றி யிடாதொரு
சுளிவு தலைக்கொண்டு புன்புலை வாரிகள்
துளையொழு கக்கண்டு சிந்தனை ஒய்வொடு

நடைகெட முற்கொண்ட பெண்டிர் பொறாதொரு
நடலை நமக்கென்று வந்தன பேசிட
நலியிரு மற்கஞ்சி உண்டி வேறாவிழு
நரக உடற்கன்பு கொண்டலை வேனினி

மிடலொடி யப்பண் டிலங்கையர் கோனாரு
விரலின் அமுக்குண்டு பண்பல பாடிய
விரகு செவிக்கொண்டு முன்புள தாகிய
வெகுளி தவிர்த்தன்று பொன்றி யிடாவகை

திடமருள் வைக்குஞ் செழுஞ்சுடர் ஊறிய
தெளியமு தத்தின் கொழுஞ்சுவை நீடிய
திலைநக ரிற்செம்பொன் அம்பல மேவிய
சிவனை நினைக்குந் தவஞ்சது ராவதே.

39


848.குறிப்புரை: “(நான்) உடற்குஅன்பு செய்து அலைவேன்; (இதனை விடுத்துத்) தில்லையம்பலம் மேவிய சிவனை நினைக்கும் தலமே இனி (எனக்குச்)சதுராவது” என முடிவு கொள்க. அங்கம் - உறுப்புக்கள்.தொடர நரைத்து - நாள்தோறும் தொடர்ந்து நரை தோன்றப்பெற்றுமுன்பு - இளமைக் காலத்தில் ஒன்றும் - (அங்கம்) ஒன்றேனும்.ஒன்றியிடாது - வசப்படாது. “தளிவு தலைக்கொண்டு”என்பதை, “கண்டு” என்பதன்பின் கூட்டுக. ‘வெறுப்பை மேற் கொண்டு’ என்பது இதன் பொருள். புன்புலைவாரிகள் - அற்பமான இழிந்த நிர்கள்; கோழை, சிறுநீர்முதலியன. நடை கெட - நடத்தல் இல்லாதொழிய. (இடம்பெயராது கிடந்து என்றபடி) கொண்ட பெண்டிர் - மனைவியர்.‘தொல்லை பொறாது’ என்க. நடலை - துன்பம். விழும்உடல் - இறுதியில் வீழ்ந்தொழிகின்ற உடம்பு. நரகஉடல் - இழிவாலும், துன்பத் தாலும் நரகம்போல்வதாகியஉடம்பு. மிடல் - வலிமை. விரகு - திறமை. ‘அவன் பொன்றியிடா வகை’ என்க. திடம் - உறுதி ‘திடமாக’என ஆக்கம் வருவிக்க. அருள்காரணமாகத் தரப்பட்டவரத்தினது திடம். அதற்குக் காரணமான அருள்மேல் ஏற்றப்பட்டது.ஊறிய - உள்ளுள் சுரக்கின்ற. “சுடர், சுவை” என் பனபின் வந்த “சிவன்” என்னும் ஒரு பொருள்மேல் வந்த பெயர்கள். நீடிய - நிலை பெற்ற. அம்பலம்’ என்க.சதுர் - திறமை.