849. | சதுர்முகன் தந்தைக்குக் கதிர்விடு கடவுள் ஆழி கொடுத்த பேரருள் போற்றி முயற்சியொடு பணிந்த இயக்கர்கோ னுக்கு மாநிதி இரண்டும் ஆனாப் பெருவளத் |
5 | தளகை ஒன்றும் தளர்வின்றி நிறுவிய செல்வங் கொடுத்த செல்வம் போற்றி தாள்நிழல் அடைந்த மாணிக் காக நாண்முறை பிறழாது கோண்முறை வலித்துட் பதைத்துவருங் கூற்றைப் படிமிசைத் தெறிக்க |
10 | உதைத்துயிர் அளித்த உதவி போற்றி குலைகுலை குலைந்த நிலையாத் தேவர் படுபேர் அவலம் இடையின்று விலக்கிக் கடல்விடம் அருந்தன கருணை போற்றி தவிராச் சீற்றத் தவுணர் மூவெயில் |
15 | ஒல்லனல் கொளுவி ஒருநொடிப் பொடிபட வில்லொன்று வளைத்த வீரம் போற்றி பூமென் கரும்பொடு பொடிபட நிலத்துக் காமனைப் பார்த்த கண்ணுதல் போற்றி தெய்வ யாளி கைமுயன்று கிழித்தெனக் |
20 | கரியொன் றுரித்த பெருவிறல் போற்றி பண்டு பெரும்போர்ப் பார்த்தனுக் காகக் கொண்டு நடந்த கோலம் போற்றி விரற்பதம் ஒன்றில் வெள்ளிமலை எடுத்த அரக்கனை நெரித்த ஆண்மை போற்றி |
25 | விலங்கல் விண்டு விழுந்தென முன்னாள் சலந்தரற் றடிந்த தண்டம் போற்றி தாதையை எறிந்த வேதியச் சிறுவற்குப் பரிகலங் கொடுத்த திருவுளம் போற்றி நின்முதல் வழிபடத் தன்மகன் தடிந்த |
30 | தொண்டர் மனையில் உண்டல் போற்றி வெண்ணெய் உண்ண எண்ணுபு வந்து நந்தா விளக்கை நுந்துபு பெயர்த்த தாவுபல் எலிக்கு மூவுல காள |