850. | திருவளர் பவளப் பெருவரை மணந்த மரகத வல்லி போல ஒருகூ(று) இமையச் செல்வி பிரியாது விளங்கப் பாய்திரைப் பரவை மீமிசை முகிழ்த்த |
5 | அலைகதிர்ப் பரிதி ஆயிரந் தொகுத்த வரன்முறை திரியாது மலர்மிசை இருந்தெனக் கதிர்விடு நின்முகங் காண்தொறுங் காண்தொறும் முதிரா இளமுலை முற்றாக் கொழுந்தின் திருமுகத் தாமரை செவ்வியின் மலரநின் |
10 | தையல் வாணுதல் தெய்வச் சிறுபிறை இளநிலாக் காண்தொறும் ஒளியொடும் புணர்ந்தநின் செவ்வாய்க் குமுதஞ் செவ்வி செய்யநின் செங்கைக் கமலம் மங்கை வனமுலை அமிர்த கலசம் அமைவின் ஏந்த |
15 | மலைமகள் தனாது நயனக் குவளைநின் பொலிவினொடு மலர மறையோர் கழுமலம் நெறிநின்று பொலிய நாகர் நாடு மீமிசை மிதந்து மீமிசை உலகங் கீழ்முதல் தாழ்ந்திங்(கு) |
20 | ஒன்றா வந்த குன்றா வெள்ளத்(து) உலகம்மூன் றுக்குங் களைகண் ஆகி முதலில் காலம் இனிதுவீற் றிருந்துழித் தாதையொடு வந்த வேதியச் சிறுவன் தளர்நடைப் பருவத்து வளர்பசி வருத்த |
25 | ‘அன்னா யோ’வென் றழைப்பமுன் நின்று ஞான போனகம் அருளட்டிக் குழைத்த ஆனாத் திரளை அவன்வயின் அருள அந்தணன் முனிந்து ‘தந்தார் யார்’என |