பக்கம் எண் :

619திருக்கழுமல மும்மணிக்கோவை

காமனை விழித்த மாமுது தலைவ
வானவர் அறியா ஆதி யானே
கல்லா மனத்துப் புல்லறிவு தொடர
மறந்து நோக்கும் வெறுங்கண்நாட் டத்துக்

15

காண்தொறும் காண்தொறும் எல்லாம் யாண்டை

யாயினும் பிறவும் என்னதும் பிறரதும்
ஆவன பலவும் அழிவன பலவும்
போவதும் வருவதும் நிகழ்வதும் ஆகித்
தெண்ணீர் ஞாலத்துத் திரண்ட மணலினும்

20

எண்ணில் கோடி எனைப்பல வாகி

இல்லன உளவாய் உள்ளன காணாப்
பன்னாள் இருள்வயிற் பட்டேன் அன்னதும்
அன்ன தாதலின் அடுக்கும் அதென்னெனின்
கட்புலன் தெரியாது கொட்புறும் ஒருவற்குக்

25

குழிவழி யாகி வழிகுழி யாகி

ஒழிவின் றொன்றின் ஒன்றுதடு மாற
வந்தாற் போல வந்த(து) எந்தைநின்
திருவருள் நாட்டம் கருணையின் பெறலும்
யாவையும் எனக்குப் பொய்யெனத் தோன்றி

30

மேவரும் நீயே மெய்யெனத் தோன்றினை

ஓவியப் புலவன் சாயல்பெற எழுதிய
சிற்ப விகற்பம் எல்லாம் ஒன்றித்
தவிராது தடவினர் தமக்குச்
கவராய்த் தோன்றுங் துணிவுபோன் றெனவே.

10


ஒன்றாக பன்னிரு பெயரைப் பெற்றது, அப்பெயர்களாவன பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம்,பூந்தாராய், சிரபுரம், புறவம், சண்பை, காழி, கொச்சைவயம், கழுமலம்’ என்பன. இவை ஞானசம்பந்தர் பாடல்கள் பலவற்றில் எடுத்தோதி அருளப்பட்டிருத்தல் காண்க. மை - குற்றம். அமை நாண் தோள் - மூங்கி நாணத்தக்க தோள். சேவகம் - வீரம். மாமுது தலைவன் - பெரிய,பழைய தலைவன். ஆதியான் - முதற் கடவுள். கல்லா உளம்- கல்வியைக் கல்லாத மனம். ‘அதன்கண் தோன்றும்புல்லறிவு’ என்க. தொடர - தொடர்ந்து நிகழ்தலால். மறந்து - ஆன்றோர் உரைகளை மறந்து. வெறுங் கண் - கல்வியறிவோடு கூடாத கண். இதனை,